பிரதமர் மோடி பெண்களுடன் கார்பா நடனம் ஆடுவது போன்ற வீடியோ வெளியாகிய நிலையில், இது தொடர்பாக அவர் விளக்கமளித்துள்ளார்.
AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் DeepFake என்ற செயலி டிரெண்டிங்கில் இருந்து வருகிறது. இந்த செயலியின் மூலம் ஒரு புகைப்படத்தையோ அல்லது வீடியோவையோ மார்பிங் செய்து உண்மையான வீடியோ போல சித்தரிக்க முடியும். அதேபோல, ஒருவரின் குரலையும் தேவைக்கேட்ப மாற்றிக்கொள்ளலாம்.
அண்மையில், நடிகைகள் ராஷ்மிகா மந்தனா, கத்ரினா கைஃப், கஜோல் ஆகியோரின் வீடியோக்கள் ஆபாசமாக மார்பிங் செய்யப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதேபோல, பிரதமர் மோடியின் குரலை பயன்படுத்தி, தமிழ் பாடல்கள் பாடிய ஆடியோ சமூக வலைதளங்களி வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பாஜகவினரும் போலீஸில் புகார் அளித்துள்ளனர்.
இந்த சூழலில், பிரதமர் மோடி, பெண்களோடு சேர்ந்து கார்பா நடனம் ஆடுவது போன்ற DEEPFAKE வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது.
இது தொடர்பாக, டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி, “நான் கார்பா நடனம் ஆடியது போன்ற ஒரு வீடியோவை சமீபத்தில் பார்த்தேன். இதுபோன்ற போலி வீடியோக்கள் மிகவும் கவலை அளிக்கின்றன. இது குறித்து சாட்ஜிபிடி குழுவினருடன் பேசி, எச்சரித்துள்ளேன். தொழில்நுட்பம் பொறுப்புடன் கையாளப்பட வேண்டும். ஊடகங்கள் இது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்,”என்று கூறினார்.
தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று பின்னர், அறிவிப்பாளர், பாடகர் என பன்முகத் திறமை கொண்டவர் நடிகர் சிவக்குமார் ஜெயபாலன். இதையும்…
கேஜிஎஃப் கதாநாயகி யாஷ் நடித்த “கேஜிஎஃப்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகமானவர் ஸ்ரீநிதி ஷெட்டி. இவர் தனது முதல் திரைப்படத்திலேயே…
கனவுக்கன்னி தற்கால இளைஞர்களின் கனவுக்கன்னிகளில் ஒருவராக வலம் வருபவர் மாளவிகா மோகனன். இவர் மலையாளத்தில் மிக பிரபலமான நடிகையாக வலம்…
தமிழ் திரைப்பிரபலங்களின் திடீர் மறைவு திரையுலகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது. அந்த வகையில் பிரபல திரைப்பட இயக்குநர் திடீரென மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.…
தமிழக வெற்றி கழகம் கட்சியின் பூத் கமிட்டி முகவர்கள் கூட்டம் இன்று மாலை கோவை சக்தி சாலை குரும்பபாளையம் பகுதியில்…
This website uses cookies.