ஆயத்த ஆடைகள் உற்பத்தி செய்யும் பன்னாட்டு நிறுவனத்தில் விஷவாயு கசிவு : ஊழியர்கள் மயங்கி விழுந்ததால் பரபரப்பு… போலீசார் விசாரணை!!

ஆந்திர மாநிலம் அணக்காப்பள்ளி மாவட்டத்தில் உள்ள அச்சுதாபுரத்தில் “காண்டிக்ஸ்” என்ற பெயரிலான ஆயத்த ஆடைகளை உற்பத்தி செய்யும் பன்னாட்டு நிறுவனம் செயற்பட்டு வருகிறது.

அந்த நிறுவனத்தின் அருகில் மருந்து தயாரிப்பு கம்பெனி ஒன்று உள்ளது. அச்சுதாபுரத்தில் உள்ள சிறப்பு பொருளாதார மண்டலத்தில் இந்த இரண்டு நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து நேற்று மாலை வெளிப்பட்ட விஷவாயு அந்த பகுதி முழுவதும் பரவியது.

இரண்டு நிறுவனங்களிலும் சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். விசவாயு பரவியதும் மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் அங்கிருந்து வெளியேறிவிட்டனர்.

ஆனால் காண்டிக்ஸ் ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனத்தில் பணியாற்றும் பெண்களில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் விஷவாயுவை சுவாசித்து மயக்கம் அடைந்தனர்.

மயக்கம் அடைந்த பெண் ஊழியர்கள் உடனடியாக சிறப்பு பொருளாதார மண்டலத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனால் அந்த பகுதியில் செயல்படும் நிறுவனங்களுக்கு தற்போது தற்காலிக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விஷவாயு கசிவு பற்றிய தகவல் அறிந்து மாவட்ட உயரதிகாரிகள் அங்கு சென்று ஆய்வு நடத்தி வருகின்றனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

காவல்துறை அனுமதி மறுத்தால் நீதிமன்றம் சென்று மீண்டும் அதே இடத்தில் நடத்துவோம் : பாஜக பிரமுகர் எச்சரிக்கை!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காந்தி கலையரங்கத்தில் சட்ட மாமேதை அம்பேத்கரின் பிறந்த நாள் விழா, வக்ஃபு வாரிய சட்ட திருத்தம்…

14 seconds ago

வடிவேலு கூட அப்படி ஆகிடுச்சு? மத்தவங்க இருந்ததுனால தப்பிச்சேன்- கவர்ச்சி நடிகை ஓபன் டாக்

வைகைப்புயல் மீது பிராது வைகைப்புயல் என்று அழைக்கப்படும் காமெடி நடிகர் வடிவேலு கோலிவுட்டின் டாப் காமெடி நடிகராக வலம் வந்த…

45 minutes ago

அஸ்திவாரம் தோண்டும் போதே அபசகுணம்.. புதிய கட்டிடத்துக்காக காவு வாங்கிய பழைய கட்டிடம்!

கரூர், பஞ்சமாதேவி பகுதியில் பொன்னுச்சாமி என்பவர் புதியதாக கட்டி வரும் வீட்டிற்கு சுற்றுச்சுவர் கட்டுவதற்காக சிவாஜி, ராஜேந்திரன், மாயவன் ஆகிய…

1 hour ago

ஜிவி பிரகாஷை வம்புக்கு இழுக்கறியா? திவ்யபாரதியை ஒருமையில் திட்டிய பிரபலம்.. புது பஞ்சாயத்து ஆரம்பம்!

ஜிபி பிரகாஷ் - சைந்தவி பள்ளி பருவத்திலேயே காதலித்து வந்தனர். தொடர்ச்சியாக பல வருடமாக காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணமும்…

2 hours ago

கெரியருக்கே ஆப்பு வைத்த மேனேஜர்! ஸ்ரீகாந்த் பக்கத்துல சனியன் பாய் விரிச்சி படுத்திருக்கான் போல?

மேனேஜரால் வந்த வினை… நடிகர் ஸ்ரீகாந்த் தமிழ் சினிமாவில் அறிமுகமானபோது ஒரு நம்பிக்கை நட்சத்திரமாகவே வலம் வந்தார். ஒரு இளம்…

2 hours ago

பென்சிலுக்காக மாணவனை அரிவாளால் வெட்டிய 8ஆம் வகுப்பு மாணவன்.. சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு!

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள ரோஸ்மேரி தனியார் பள்ளி இன்று வழக்கம் கோல செயல்பட தொடங்கியது. அந்த சமயம் 8ஆம்…

3 hours ago

This website uses cookies.