”இன்னைக்கு ஒரு புடி”…காவல்நிலையத்தில கூட்டாஞ்சோறு சமைத்த காவலர்கள் : சிக்கனால் எழுந்த சிக்கல்!!!
கேரளா மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள இலவன்திட்டா காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர்கள், காவல் நிலைய வாகனத்தில் கடைக்கு சென்று சிக்கன் வாங்கி, அதனை எடுத்து வந்து காவல் நிலையத்தில் வைத்து சிக்கன் மற்றும் கிழங்கை சமைத்து சாப்பிட்டுள்ளனர்.
இந்த காட்சிகளை முழுவதுமாக வீடியோவாக பதிவு செய்து அதனை சமூக வலைதளங்களிலும் பதிவிட்டுள்ளனர். பதிவிட்ட ஒரு சில நாட்களிலேயே இந்த காவல் நிலைய சமையல் வீடியோ பலரையும் கவர்ந்துள்ளது .
பலரும் இந்த வீடியோவுக்கு நல்ல வரவேற்பும் அளித்து நல்ல விதமான கமெண்ட்களையும் பதிவு செய்து வந்துள்ளனர்.
இதை தொடர்ந்து, இந்த சமையல் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆனதையடுத்து, பணிநேரத்தில் காவல் நிலையத்தில் வைத்து சமையல் செய்தது மற்றும் அதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றியது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என அந்த நிலைய காவலர்களுக்கு உயரதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
மேலும், காவல்நிலைய வாகனத்திலேயே சென்று சமையலுக்கு தேவையான பொருட்களை வாங்கி வந்து அதனை காவல் நிலையத்திலேயே வைத்து சமைத்து எல்லா காவல் அதிகாரிகளும் ரசித்து சமைத்து ருசித்தது வீடியோவாக எடுத்து பதிவிட்டு பொறுப்பற்ற நிலையில் காவல் நிலையத்தில் செயல்பட்ட அந்த வீடியோ வைரல் காட்சிகள் பலரையும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.
பணி நேரத்தில் பொறுப்பற்ற வகையில் ரீல்ஸ் போடுவது அவர்களின் அலட்சியத் தன்மையை காட்டுவதாக சமூக ஆர்வலர்கள் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
எதையோ செய்ய நினைத்தது இப்படி வசமாக மாட்டிகொண்ட காவலர்கள் செயல்தான் கேரளாவில் தற்போது பேசுபொருளாகியுள்ளது.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.