மொராக்கோவை தொடர்ந்து திரிபுராவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. அலறி ஓடிய மக்கள்!!!
சமீபகாலமாக இந்தியாவின் பல பகுதிகளில் அதிக அளவில் நிலநடுக்கங்கள் பதிவாகி வருகின்றன. அந்தவகையில் தற்பொழுது, திரிபுராவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் 4.4 என்ற ரிக்டர் அளவில் ஏற்பட்டுள்ளது என்று நில அதிர்வுக்கான தேசிய மையம் (National Center for Seismology) தெரிவித்துள்ளது.
இன்று மதியம் 3.48 மணியளவில் திரிபுராவின் வடக்கு திரிப்புரா மாவட்டத்தில் அமைந்துள்ள தர்மநகருக்கு வடகிழக்கே 72 கிமீ தொலைவில், 4.4 ரிக்டர் அளவில் ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கம் 43 கிமீ ஆழத்தில் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் உயிர்சேதம் மற்றும் பொருள்சேதம் ஏதும் ஏற்பட்டதா என்ற தகவல் வெளியாகவில்லை.
இதற்கிடையில், மொராக்கோ நாட்டின் மாரகேஷ் நகரத்தில் ஏற்பட்ட 6.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் இடிந்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 632ஆக அதிகரித்துள்ளது.
மேலும், காயமடைந்த 300 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.நில நடுக்கம் ஏற்பட்ட இடத்தில் மீட்புப்பணி விரைவாக நடந்து வருகிறது.
மேலும், இடிபாடுகளில் பலர் சிக்கி இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. கடலோர நகரங்களான ரபாட், காசாபிளாங்கா மற்றும் எஸ்ஸௌயிராவிலும் இந்தவலுவான நடுக்கம் உணரப்பட்டதாக அந்நாட்டு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
சரிந்து விழுந்த அஜித் கட் அவுட்… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற…
திருச்சி சரக DIG வருண்குமார் குறித்தும் அவருடைய குடும்பத்தினர் குறித்தும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் சமூக வலைத்தளங்களில் அவதூறான…
ஒரு பக்கம் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் போக்கு காட்டி வரும் நிலையில், சாமானியர்களுக்கு அடுத்த அதிர்ச்சியை கொடுத்துள்ளது மத்திய…
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பெருஞ்சேரியில் 19ஆம் தேதி சுமார் ஒரு லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில்…
திருச்சி சரக டிஐஜி வருண்குமார் மற்றும் அவரது மனைவியும் ஐபிஎஸ் அதிகாரியமான வந்திதா பாண்டேவை உள்ளிட்ட அவரது குடும்பத்தினரை பற்றி…
This website uses cookies.