மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜியுடன் ஏற்பட்ட மோதலால், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடனான ஒப்பந்தத்தை அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் முறித்துக் கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அரசியல் ஆலோசகராக பிரசாந்த் கிஷோர் ஒப்பந்தம் செய்திருந்தார். அவரது ஆலோசனைகளின் மூலம் மம்தா பானர்ஜி 3வது முறையாக மீண்டும் ஆட்சியமைக்கும் வாய்ப்பை பெற்றார். அவர் வெற்றி பெற பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனம் வகுத்துக் கொடுத்த திட்டங்களே முக்கிய காரணமாகும்.
மத்தியில் பாஜகவை வீழ்த்த காங்கிரஸ் கட்சிக்கு தகுதியில்லை எனக் கூறி, மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைமைக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தார். அதோடு, இன்னும் 10 ஆண்டுகளுக்கு பாஜகவை வீழ்த்த முடியாது என்று எதிர்கட்சிகளிடையே குண்டை தூக்கிப் போட்டார்.
இது ஒருபக்கம் இருந்தாலும், மேற்கு வங்கத்தில் நடக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வேட்பாளர் தேர்வு விவகாரத்தில் மம்தா பானர்ஜிக்கும், பிரசாந்த் கிஷோருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக பிரசாந்த் கிஷோரின் ‘ஐபேக்’நிறுவனத்தின் ஒப்பந்தத்தை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முறித்துக்கொள்ள திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து மம்தா பானர்ஜி எந்த கருத்தும் தெரிவிக்காமல் உள்ளார்.
கணவனுக்கு நடந்த விசித்திரமான, அதிர்ச்சியான சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது. சந்தீப் என்பவர் ரஞ்சனா என்பவரை திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்கு பிறகு…
அர்ஜுன் ரெட்டி நடிகை “அர்ஜுன் ரெட்டி” திரைப்படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமானவர் ஷாலினி பாண்டே. “அர்ஜுன் ரெட்டி” திரைப்படம்…
ஹைதராபாத் கச்பவுலி பகுதியில் ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள 400 ஏக்கர் நிலத்தை ஐடி பார்க்…
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
This website uses cookies.