உக்ரைன் மீது தொடுத்துள்ள போரை நிறுத்தும்படி ரஷ்ய அதிபர் புதினிடம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷ்யாவிடம் போரை நிறுத்தும்படி பிரதமர் நரேந்திர மோடி சொல்ல வேண்டும் என்று டெல்லியில் உள்ள உக்ரைன் தூதரகம் மூலம் இன்று வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது. இந்த வேண்டுகோளை ஏற்றுகொள்ளும் விதமாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை பிரதமர் மோடி இன்றிரவு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போது, உக்ரைன் மீதான போரை உடனடியாக நிறுத்தும்படி புதினிடம் அவர் வலியுறுத்தினார். அத்துடன் இருநாடுகளுக்கும் இடையேயான பிரச்னைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் நேர்மையான முறையில் தீர்வு காண முயற்சிக்க வேண்டும் என்றும் மோடி அறிவுறுத்தியுள்ளார்.
இந்தியா -ரஷ்யா இடையேயான நீண்ட காலமாக நல்லுறவை கருத்தில் கொண்டு, உக்ரைனில் உள்ள பல்லாயிரக்கணக்கான இந்தியர்களின் பாதுகாப்புக்கு மிகுந்த முக்கியத்துவம் தரும்படியும் புதினிடம் மோடி கேட்டு கொண்டுள்ளார்.
உக்ரைன் -ரஷியா இடையேயான போரில் நடுநிலைமை வகிப்பதாக இந்தியா தெரிவித்திருந்துள்ள நிலையில், போரை உடனடியாக நிறுத்தும்படி ரஷ்ய அதிபரை, பிரதமர் மோடி கேட்டு கொண்டுள்ளது சர்வதேச அரங்கில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
தமிழ் திரையுலகில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் மிகப்பெரிய வெற்றிப் படமாக டிராகன் படம் உருவாகியுள்ளது,அஸ்வந்த் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன்…
காசு மழையில் டிராகன் கடந்த மாதம் பிப்ரவரி 21 ஆம் தேதி அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில்…
டி.ராஜேந்திரனின் பரிதாப நிலை.! தமிழ் சினிமாவில் நடிகர்,இயக்குநர்,இசையமைப்பாளர்,தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர்,விநியோகஸ்தர்,அரசியல் வாதி என பல்வேறு திறமைகளை கையில் வைத்திருப்பவர் டி.ராஜேந்திரர். இதையும்…
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் ராம் சந்தர் (வயது 35). இவர் கோவையில் தங்கி தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார்.…
பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்.! நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை…
நடிகர் விஜய் தற்போது சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். தனது கடைசிபடம் ஜனநாயகன் தான் என கூறியுள்ள நிலையில் தமிழக…
This website uses cookies.