பிரதமர் மோடிக்கு கிடைத்த 1,200 பரிசு பொருட்களை ஆன்லைன் மூலம் ஏலத்தில் விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
பல்வேறு நிகழ்வுகள் மற்றும் பயணங்களின்போது பிரதமர் மோடிக்கு கிடைத்த பரிசு பொருட்களை ஏலத்தில் விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
அந்தவகையில் பிரதமர் மோடியின் பிறந்த தினமான இன்று முதல் 1,200 பரிசு பொருட்கள் ஏலத்தில் விற்பனை செய்யப்படுகின்றன. அடுத்த மாதம் 2-ந்தேதி வரை ஆன்லைன் மூலம் நடைபெறும் இந்த ஏலத்தில் “pmmementos.gov.in” என்ற இணையதளம் மூலம் பங்கேற்கலாம்.
ஏலத்தில் விற்பனை செய்யப்படும் பொருட்களில் சில பொருட்கள் டெல்லியில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டு உள்ளன. டெல்லி இந்தியா கேட் பகுதியில் சமீபத்தில் திறக்கப்பட்ட நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் சிலையின் மாதிரி, விநாயகர் சிலை, அயோத்தி ராமர் கோவிலின் மாதிரி, காசி விஸ்வநாதர் கோவில் மாதிரி போன்றவை முக்கியமானவை ஆகும்.
இதைப்போல பிரதமர் மோடிக்கு பரிசாக கிடைத்த விளையாட்டு நினைவுப்பொருட்களும் ஏலத்தில் விடப்படுகின்றன. அந்தவகையில் காமன்வெல்த் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்றவர்கள் பிரதமர் மோடிக்கு வழங்கிய பரிசு பொருட்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்களும் இந்த ஏலத்தில் விற்பனை செய்யப்படுகின்றன.
இந்த தகவல்களை மத்திய கலாசாரத்துறை மந்திரி கிஷண் ரெட்டி நேற்று டெல்லியில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது வெளியிட்டார்.
பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…
ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
This website uses cookies.