மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் விவகாரம் இந்திய மனங்களை கலங்கடித்துள்ளது. உலக சாம்பியனை முதல் சுற்றில் வெளியேற்றி சாதித்த வினேஷ் போகத், 50 கிலோ எடையை விட 100கிராம் கூடுதலாக உள்ளதால் தகுதி நீக்கம் செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே அவருக்கு இந்திய ரசிகர்கள் ஆறுதல் தெரிவித்து வரும் நிலையில், நேற்று பிரதமர் மோடியும் தனது X தளப்பதிவில் ஆறுதல் கூறினார்.
இந்த நிலையில் ஒலிம்பிக் போட்டியில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வினேஷ் போகத்தின் வீட்டுக்கு சென்று அவரது குடும்பத்தினருக்கு பஞ்சாப் முதல்வர் பகவத்மான் ஆறுதல் கூறினார்.
அதன்பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது இந்த தவறு உயர்மட்ட அளவில் நடந்துள்ளது என்றும் பயிற்சியாளர்கள் லட்சக்கணக்கில் சம்பளம் பெறும் நிலையில் அவர்கள் உடல் எடையை முதலில் கவனிக்க வேண்டாமா? அவர்கள் என்ன விடுமுறையை கழிக்க பாரிஸ் சென்றார்கள்? என்று கேள்வி எழுப்பினார்.
வினேஷ் போகத் தகுதி நீக்கத்தை ரத்து செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால் இந்திய வீரர்கள் அனைவரும் ஒலிம்பிக் போட்டியை புறக்கணித்துவிட்டு நாடு திரும்ப வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் வினேஷ் போகத் முதல் சுற்றில் வென்ற போது வாழ்த்து சொல்லாத பிரதமர் மோடி, தகுதி நீக்கம் செய்யப்பட்டதும் பிரதமர் உடனே ட்வீட் செய்தது குறித்து சந்தேகத்தையும் கிளப்பியுள்ளார்.
தமிழக முதல்வர், பஞ்சாப் முதல்வர் உள்பட பலரும் வினேஷ் போகத்திற்கு தங்களது ஆதரவை தெரிவித்து வரும் நிலையில் மத்திய அரசு தகுதி நீக்கத்தை ரத்து செய்ய தகுந்த நடவடிக்கை எடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
This website uses cookies.