சண்டிகரில் விடுதி மாணவிகளின் வீடியோக்களை சமூக வலைதளத்தில் பதிவிட்ட மாணவியை போலீசார் கைது செய்துள்ளனர்.
பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் உள்ள சண்டிகர் பல்கலைக்கழகத்தில் ஒரு பெண் தனது சக தோழிகளின் அந்தரங்க வீடியோக்களை சமூக வலைதளங்களில் கசியவிட்டதாகக் கூறப்பட்டதையடுத்து போராட்டங்கள் வெடித்தன.
இந்த விவகாரத்தில் எப்ஐஆர் பதிவு செய்த போலீசார், குற்றம் சாட்டப்பட்ட மாணவியை போலீசார் கைது செய்துள்ளனர். வீடியோ கசிவு காரணமாக பல மாணவிகள் தற்கொலை செய்து கொள்ள முயன்றதாக சமூக ஊடகப் பதிவு வெளியாகி இருப்பதை பல்கலைக்கழகமும் காவல்துறையும் மறுத்துள்ளன.
மாணவி ஒருவர் மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக பஞ்சாப் மாநில மகளிர் ஆணையத் தலைவர் மனிஷா குலாட்டி தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் தப்பிக்க விட மாட்டோம் என்று அனைத்து மாணவர்களின் பெற்றோருக்கும் உறுதியளிக்கிறேன் என பஞ்சாப் பள்ளிக் கல்வி துறை மந்திரி ஹர்ஜோத் சிங் பெயின்ஸ் கூறியுள்ளார். மேலும் பல்கலைக்கழக மாணவர்கள் அமைதி காக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.