சண்டிகர் : பஞ்சாப்பில் காங்கிரஸ் கொள்ளையடிப்பதாகவும், ஆம்ஆத்மி ஊழல் செய்வதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு பாஜக வேட்பாளர்களை ஆதரித்து, பதான்கோட்டில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார். அவர் பேசியதாவது :- பஞ்சாப் மாநிலத்தில் லட்சக்கணக்கான மக்களுக்கு இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா சமயத்தில் கூட ஏழைகள் பசியில்லாமல் தூங்கும் வகையில் உணவுப் பொருட்களை வழங்கினோம்.
எல்லையில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களை காங்கிரஸ் அவமானப்படுத்தியது. பதன்கோட் தாக்குதலின் போது, நமது படைகள் மீது சந்தேகம் கூறி, காங்கிரஸ் தரம் தாழ்ந்து செயல்பட்டது. காங்கிரஸ் கட்சியின் ஜெராக்ஸ் காப்பிதான் ஆம்ஆத்மி கட்சி. பஞ்சாபில் காங்கிரஸ் கொள்ளையடித்தால், டெல்லியில் ஆம் ஆத்மி ஊழல் செய்கிறது.
ரிமோட் கண்ட்ரோல் குடும்பமான காங்கிரஸ் கட்சிக்கு பஞ்சாப்பில் மக்கள் பிரியா விடை அளிக்க வேண்டும். உங்களுக்காக 5 ஆண்டுகள் பணியாற்ற வாய்ப்பை ஏற்படுத்தி கொடுங்கள். வேளாண்மை, வணிகம், தொழில் ஆகியவை லாபகரமாக மாறும் என நான் உறுதியளிக்கிறேன், எனக் கூறினார்.
—
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
This website uses cookies.