பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அம்மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத்சிங் சித்து மீது அவரது தங்கை பகீர் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
பஞ்சாப் சட்டப்பேரவைக்கு வரும் பிப்.,20ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்காக பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர தேர்தல் பகிளில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த சூழலில், பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து மீது அமெரிக்காவில் உள்ள அவரது தங்கை பகீர் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது : – 1986ல் நவ்ஜோத் சிங் சித்து எங்களின் தந்தை இறந்தவுடன், தன்னையும், எனது தாயையும் கைவிட்டு விட்டார். இதனால், 1989ம் ஆண்டு எனது தாய் டெல்லி ரயில்நிலையத்தில் ஆதரவற்று இறந்து கிடந்தார். தனது 2 வயதில் தந்தை இறந்து விட்டதாக சித்து கூறுவது முற்றிலும் பொய். பணத்திற்காக அவர் எல்லோரையும் விட்டுவிட்டார், எனக் குறிப்பிட்டுள்ளார்.
அவரது இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக சித்து தரப்பில் இருந்து எந்தவிதமான மறுப்பும் தெரிவிக்காதது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இன்னும் 20 நாட்களே உள்ள நிலையில், சித்து மீது அவரது சகோதரியின் இந்தப் பரபரப்பு குற்றச்சாட்டு பஞ்சாப் அரசியலில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.