பஞ்சாப் மாநிலத்தின் முதலமைச்சராக ஆம்ஆத்மி கட்சியைச் சேர்ந்த பகவந்த் மான் இன்று பதவியேற்கிறார்.
117 இடங்களைக் கொண்ட பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ், பாஜகவை வீழ்த்தி ஆம்ஆத்மி கட்சி 92 இடங்களில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. இதையடுத்து, கடந்த சனிக்கிழமை ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்த முதலமைச்சர் வேட்பாளர் பகவந்த் மான், ஆட்சியமைக்க உரிமை கோரினார். இதனையேற்று அவரும் அழைப்பு விடுத்தார்.
அதன்பேரில், சுதந்திர போராட்டத் தியாகியான பகத்சிங்கின் கிராமமான கத்கர் கலனில் இன்று பதவியேற்பு விழா நடைபெறுகிறது. இந்த நிகழ்வுக்காக 100 ஏக்கர் பரப்பளவில் விழா அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. இதில், பகவந்த் மான் முதலமைச்சராக பதவியேற்க இருக்கிறார். அவருடன் 16 அமைச்சர்களும் பொறுப்பேற்க உள்ளனர்.
பதவியேற்பு விழாவில் ஆம்ஆத்மியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பஞ்சாப்பின் முக்கிய தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சினிமாவில் திருமணமான நடிகருடன் நெருக்கமாக இருப்பது, பின்னர் காதலிப்பது கல்யாணம் வரை சென்று பிரிவது என ஏராளமான விஷயங்கள் நடப்பது…
சீமான் மீது அளித்த புகாரின் மீது இனி எந்தப் போராட்டம் நடத்தப்போவதில்லை என நடிகை விஜயலட்சுமி தான் வெளியிட்ட வீடியோ…
நடிகை மீனாட்சி செளத்ரியை மாநில பெண்கள் அதிகாரமளித்தல் பிராண்ட் அம்பாசிடராக ஆந்திர அரசு நியமித்ததாக வரும் தகவலில் உண்மையில்லை என…
கொரோனா பேரிடரின்போது உயிரிழந்த மருத்துவரின் மனைவிக்கு வேலை மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும் என அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக்…
விஜய் அரசியல் கட்சி துவங்கியதும் பலரும் பலவிதமாக விமர்சித்து வரும் நிலையில், இயக்குநர் பேரரசு கூறியுள்ளது யோசிக்க வைத்ததுள்ளது. இயக்குநர்…
This website uses cookies.