பஞ்சாப் : பஞ்சாப் பிரபல பாடகரும், அரசியல்வாதியுமான சித்து மூஸ்வாலாவின் உயிரிழப்புக்கு ஆம்ஆத்மி கட்சிதான் காரணம் என்று காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது.
பஞ்சாப் பாடகரும், காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகருமான சித்து மூஸ்வாலா நேற்று மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். மான்ஸா நகரில் தனது வாகனத்தில் சென்று கொண்டிருந்த சித்துவுன் மீது 30 ரவுண்டுகள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில், பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இத்தாக்குதலில் மேலும் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
அவருக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பை கடந்த 26ம் தேதி ஆம் ஆத்மி அரசு வாபஸ் பெற்றது. பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்ட 3 நாட்களில் அவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள சம்பவம் ஆம்ஆத்மி கட்சியை கடும் விமர்சனத்திற்குள்ளாக்கியுள்ளது. இது அரசியல் படுகொலை என காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்தக்கொலை தொடர்பாக பஞ்சாப் டி.ஜி.பி. வீகே பவ்ரா கூறியதாவது:- பாடகர் கொலை தொடர்பாக தீவிரமாக விசாரித்து வருகிறோம். மேலும் கனடாவை சேர்ந்த லாரன்ஸ் பிஸ்னாய், பிரார் தாதா கும்பல் பேஸ்புக்கில் சில பதிவுகளில் இந்த கொலைக்கு பொறுப்பேற்றுள்ளனர். கொலையாளிகளை பிடிக்க சிறப்பு படையினர் அமைக்கப்பட்டுள்ளனர், எனக் கூறினார்.
தமிழகத்திற்கு அமித்ஷா வந்துள்ள நிலையில் அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளார். மேலும் தமிழக பாஜக தலைவராக உள்ள…
சூர்யா 45 ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தற்போது தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு…
பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…
தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…
இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…
This website uses cookies.