அவதூறு வழக்கில் ராகுல் காந்தி தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை சூரத் மாவட்ட செசன்ஸ் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக முன்னாள் அமைச்சரும் தற்போதைய பாஜக எம்எல்ஏவுமான புர்னேஷ் மோடி தொடந்த வழக்கில் குஜராத் மாநிலம் சூரத் மாவட்ட நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
இவ்வழக்கில் 4 ஆண்டுகளுக்கு பிறகு சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது குறிப்பிட்டத்தக்கது. இதனிடையே தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஏதுவாக ராகுலுக்கு உடனடியாக பிணை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, தமிழகம் உள்பட நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் நிர்வாகிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும், பாஜகவை கடுமையாக விமர்சித்து வந்தனர்.
இதனிடையே, தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து ராகுல் காந்தி தரப்பில் சூரத் மாவட்ட செசன்ஸ் நீதிமன்றம் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு பல்வேறு கட்ட விசாரணைகளுக்கு பிறகு, தீர்ப்பை நீதிபதி இன்று வெளியிட்டார்.
அதாவது, அவதூறு வழக்கில் ராகுல் காந்தி தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது சூரத் மாவட்ட செசன்ஸ் நீதிமன்றம்
மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் ராகுல் காந்திக்கு விதிக்கப்ப்டட 2 ஆண்டு சிறை தண்டனை மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்த தண்டனையை எதிர்த்து ராகுல் காந்திர தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.
கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் வேலூர் தொகுதியில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த் சார்பாக…
நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ஒரு நாயகன். கதைக்காக உடல்களை வருத்தி நடித்து பெயர்…
இழப்பீடு கேட்டு நோட்டீஸ் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படத்தில் பல காட்சிகளில் தமிழ்…
திண்டுக்கல் சுற்றுலா மாளிகையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி அளித்தார், அப்போது ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட…
வெற்றி இயக்குனர் கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக கோலிவுட்டில் சுந்தர் சி வெற்றி இயக்குனராக வலம் வருகிறார். இவர் இயக்கிய…
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பல திரைப்படங்களில் நடித்து வந்தவர் ரவீனா தாஹா. தொடர்ந்து சீரியல்களில் கமிட் ஆனார். இவர் ஜீ…
This website uses cookies.