இந்தியா

திடீரென ரிவர்ஸ் எடுத்த ரயில்.. நசுங்கிய ரயில்வே ஊழியர்!

பீகாரில் ரயில் இன்ஜினை இணைக்க முயன்ற ரயில்வே ஊழியர் கப்ளிங்கில் சிக்கி உயிரிழந்தது குறித்து பரவுனி ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பரவுனி: பீகார் மாநிலம், பரவுனி சந்திப்பில் (Barauni Junction) உள்ள நடைமேடை எண் ஐந்தில், இன்று லக்னோ – பரவுனி எக்ஸ்பிரஸ் ரயில் வந்து உள்ளது. பின்னர், அதன் இன்ஜின் மற்றும் பெட்டிகளை இணைக்க பணி செய்து உள்ளனர்.

இந்த பணியில், சமாஸ்திபூர் மாவட்டம், தால்சிங்சாரை பகுதியைச் சேர்ந்த அமர் குமார் என்ற நபர் ஈடுபட்டு உள்ளார். இவ்வாறு அவர் கப்ளிங்கை இணைத்துக் கொண்டிருந்த போது, ரயில் முன்னோக்கிச் செல்வதற்குப் பதிலாக தவறுதலாக பின்னோக்கி வந்து உள்ளது.

இதனால், கண்ணிமைக்கும் நொடியில் ரயில் மோதி உடல் நசுங்கிய அமர் குமார், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து உள்ளார். இதனையடுத்து, அங்கு நின்று கொண்டிருந்தவர்கள் கூச்சலிட்டு உள்ளனர். இதனையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற ரயில்வே அதிகாரிகள், உயிரிழந்த அமர் குமாரின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து உள்ளனர்.

இதையும் படிங்க: திடீரென அண்ணனை பார்த்த தங்கை.. பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அவலம்!

மேலும், 35 வயதான அமர் குமார் கப்ளிங்கை கழற்றிக் கொண்டிருக்கும் போது ரயில் பெட்டிகள் மோதி உடல் நசுங்கு உயிரிழந்தது குறித்து ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Hariharasudhan R

Recent Posts

நடிகர் விஜயகுமாரின் மகள் அனிதாவின் உருக்கமான பகிர்வு…வைரலாகும் வீடியோ!

உறவுகள் தான் முக்கியம் நடிகர் விஜயகுமாரின் இரண்டாவது மகள் அனிதா விஜயகுமார்,சிறு வயதிலிருந்தே மருத்துவர் ஆக வேண்டும் என்பதில் உறுதியாக…

3 hours ago

‘பேட் கேர்ள்’ டீசர் விவகாரம்…கூகுளுக்கு பறந்த நோட்டீஸ்..நீதிமன்றம் கெடுபிடி.!

படத்தின் மீது அதிகரிக்கும் எதிர்ப்பு இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி தயாரிப்பில்,அறிமுக இயக்குநர் பாரதி இயக்கத்தில் உருவாகியுள்ள…

4 hours ago

ரஜினியை சந்தித்த பிரபல தயாரிப்பு நிறுவனம்…படத்தின் ஷூட்டிங் ஆரம்பம்.!

ரஜினியிடம் ஆசி வாங்கிய ஐசரி கணேஷ் 2020ஆம் ஆண்டு வெளியான ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் சுந்தர்.சி…

5 hours ago

சாய் அபயங்கருக்கு அடிச்சது ஜாக்பாட்.. முன்னணி நடிகருடன் இணைகிறார்!

பின்னணி பாடகர்களான திப்பு மற்றும் ஹரிணியின் வாரிசுதான் சாய் அபயங்கர். இவர் ஆல்பங்களுக்கு இன்றைய கால இளசுகள் அடிமை. இவர்…

5 hours ago

சிவாஜியின் வீடு பிரபுக்கு சொந்தம்…ஜப்தி உத்தரவை எதிர்த்து ராம்குமார் மனு.!

வீடு என்னுடைய பெயரில் இல்லை நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும் நடிகருமான துஷ்யந்த்,அவரது மனைவி அபிராமியுடன் இணைந்து ஈசன்…

6 hours ago

போதைப்பொருள் வழக்கில் அதிரடி தீர்ப்பு…பெருமூச்சு விட்ட பிரபல நடிகை.!

5 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு தமிழ் மற்றும் கன்னட திரைப்பட நடிகையுமான சஞ்சனா கல்ராணி, 2020ஆம் ஆண்டு போதைப்பொருள் வழக்கில்…

7 hours ago

This website uses cookies.