ரயில்நிலையத்தின் விளம்பர திரையில் திடீரென ஆபாசப் படம் ஓடியதை பார்த்து பயணிகள் அதிர்ச்சியடைந்த சம்பவம் பீகாரில் அரங்கேறியுள்ளது.
பாட்னா நகரில் அமைந்துள்ள பாட்னா ரயில்நிலையத்தை பயன்படுத்தி நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வெளியூர்களுக்கு சென்று வருகின்றனர். எப்போதும், பரபரப்பாக காணப்படும் இந்த ரயில்நிலையத்தில் வழக்கம் போல நேற்றிரவு ஆண்கள், பெண்கள் என குடும்பத்தோடு ஏராளமான பயணிகள் ரயிலுக்காக காத்திருந்தனர்.
இரவு 9.30 மணியளவில் ரயில்நிலையத்தில் இருந்த டிஜிட்டல் விளம்பரப் பலகையின் திரையில் திடீரென ஆபாச வீடியோ ஓடியது. படத்தில் இடம்பெற்ற சத்தமும் அங்கிருந்த ஒலிப்பெருக்கியில் கேட்டதால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். மேலும், அந்த திரையை பார்க்க முடியாமல் முகத்தை திருப்பிக் கொண்டனர். இதனால், ரயில்நிலையத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில், இதனை அறிந்த ரயில்வே நிர்வாகம், உடனடியாக திரை அணைத்தது. இதன்பின், விளம்பர ஒப்பந்ததாரர் நிறுவனம் மீது பாட்னா ரயில் நிலையத்தில் உள்ள ரயில்வே போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், மர்ம நபர்களால் ஹேக்கிங் செய்யப்பட்டு இதுபோன்று நடந்ததா..? என்று கோணத்தில் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.