நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இண்டியா கூட்டணியில் இடம்பெற்றிருந்த மற்றொரு கட்சி வெளியேறியது அக்கூட்டணியிரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்த பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை எதிர்த்து எதிர்கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து இண்டியா கூட்டணியை உருவாக்கியுள்ளன.
தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் இண்டியா கூட்டணியில் இருந்து விலகினர். மேலும், பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் இண்டிய கூட்டணியில் இருந்து வெளியேறி, பாஜக ஆதரவுடன் மீண்டும் ஆட்சியமைத்துள்ளார்.
இந்த நிலையில், உத்தரபிரதேசத்தைச் ச்ந்த ராஷ்டிரிய லோக் தளம் கட்சி இண்டியா கூட்டணியில் இருந்து வெளியேறியது. அக்கட்சியின் தலைவர் ஜெயந்த் சவுதிரியின் தாத்தாவும், முன்னாள் பிரதமருமான சரண் சிங்கிற்கு மத்திய அரசு பாரத ரத்னா விருதை அறிவித்த நிலையில், அவர் இண்டியா கூட்டணியில் இருந்து விலகி, பாஜக கூட்டணியில் இணைந்துள்ளார். இது இண்டியா கூட்டணிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
பாடல் ப்ரோமோ வெளியீடு! நடிகர் அஜித் குமார் நடிப்பில்,இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘குட் பேட் அக்லி’ திரைப்படம்…
கமல் தயாரிப்பு நிறுவனம் எச்சரிக்கை.! நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனம்,தங்களுடைய நிறுவன பெயரை தவறாக பயன்படுத்தி…
திமுக எம்எல்ஏக்களைப் போல் உதயநிதிக்கு ஜால்ரா போட மக்கள் எங்களை தேர்ந்தெடுக்கவில்லை என ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். மதுரை: மதுரை புறநகர்…
திமுகவின் அரசியல் நாடகங்களை தமிழக மக்கள் இனியும் நம்பப் போவதில்லை என பகிரங்கமாக கூறியுள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.…
விக்ரம் முரட்டு கம்பேக் நடிகர் விக்ரம் நடித்துள்ள ‘வீர தீர சூரன்’ திரைப்படத்தின் இரண்டாவது நாள் வசூல் தொடர்பான தகவல்…
சி வோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பில் விஜய், 18 சதவீத வாக்குகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது தமிழக அரசியலில் கவனம் பெற்றுள்ளது.…
This website uses cookies.