நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இண்டியா கூட்டணியில் இடம்பெற்றிருந்த மற்றொரு கட்சி வெளியேறியது அக்கூட்டணியிரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்த பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை எதிர்த்து எதிர்கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து இண்டியா கூட்டணியை உருவாக்கியுள்ளன.
தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் இண்டியா கூட்டணியில் இருந்து விலகினர். மேலும், பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் இண்டிய கூட்டணியில் இருந்து வெளியேறி, பாஜக ஆதரவுடன் மீண்டும் ஆட்சியமைத்துள்ளார்.
இந்த நிலையில், உத்தரபிரதேசத்தைச் ச்ந்த ராஷ்டிரிய லோக் தளம் கட்சி இண்டியா கூட்டணியில் இருந்து வெளியேறியது. அக்கட்சியின் தலைவர் ஜெயந்த் சவுதிரியின் தாத்தாவும், முன்னாள் பிரதமருமான சரண் சிங்கிற்கு மத்திய அரசு பாரத ரத்னா விருதை அறிவித்த நிலையில், அவர் இண்டியா கூட்டணியில் இருந்து விலகி, பாஜக கூட்டணியில் இணைந்துள்ளார். இது இண்டியா கூட்டணிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
பிக்பாஸ் ஜோடி தெலுங்கு தொலைக்காட்சித் தொடர்களின் மூலம் தனது ஆக்டிங் கெரியரை தொடங்கியவர் பாவனி. அதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில்…
ஆந்திர மாநிலம் விஜயநகரம் நகரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ஒரு மாணவி செல்போன் பேசிக் கொண்டிருந்ததால் ஆத்திரமடைந்த ஆசிரியை…
பட்டத்தை திறந்த கமல் பல ஆண்டுகளாகவே கமல்ஹாசனை நாம் உலக நாயகன் என்றே அழைத்து வந்தோம். ஆனால் திடீரென சென்ற…
அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் சமீபத்தில் வெளியாக கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. குறிப்பாக அஜித் ரசிகர்களுக்கு இந்த…
பேருந்தில் பயணம் செய்த போது கண்டக்டருடன் ஏற்பட்ட கள்ளக்காதல் சம்பவத்தில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் இருகே…
புதுமையான ஆக்சன் படம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம்…
This website uses cookies.