சேஷாசலம் வனப்பகுதியில் இருந்து செம்மரங்களை வெட்டி சிலர் கடத்துவதாக சித்தூர் எஸ் பி ரிஷாந்த் ரெட்டிக்கு இன்று அதிகாலை ரகசிய தகவல் கிடைத்தது.
இந்த தகவலின் அடிப்படையில் சித்தூர் மாவட்டத்தில் உள்ள பூத்தலப்பட்டு, குடிப்பாலா ஆகிய காவல் நிலைய போலீசார் வாகன தணிக்கை மேற்கொண்டனர்.
சித்தூர்- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் எம் சி ஆர் கிராஸ் அருகே பூத்தலபட்டு போலீசார் வாகன சோதனை நடத்திய போது அந்த வழியாக செம்மரங்களை கடத்தி வந்த இரண்டு கார்களை மடக்கி அவற்றில் இருந்து எட்டு செம்மரக்கட்டைகளை கைப்பற்றி தமிழ்நாட்டின் வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களை சேர்ந்த எட்டு பேர் உட்பட சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த மூன்று பேரையும் கைது செய்தனர்.
எஸ்பி உத்தரவின் பேரில் சித்தூர்-கடப்பா நெடுஞ்சாலையில் வாகன சோதனை மேற்கொண்ட குடிபாலா போலீசார் அந்த வழியாக செம்மரங்களை கடத்திச் சென்ற இரண்டு கார்களை கைப்பற்றி அவற்றில் இருந்த நான்கு செம்மரக்கட்டைகளை கைப்பற்றி வேலூர் மாவட்டத்தை சேர்ந்த ஐந்து பேரை பிடித்து கைது செய்தனர்.
நான்கு கார்கள், 12 செம்மரக்கட்டைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார் 16 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அவர்கள் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கு செம்மரக்கட்டைகளை கடத்தி செல்வது தெரியவந்தது. கைப்பற்றப்பட்ட செம்மரக்கட்டைகளின் மதிப்பு 40 லட்ச ரூபாய் என்று போலீசார் தெரிவித்தனர்.
உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
2026ல் ஆட்சியைப் பிடிப்பது என்ற நடிகர் விஜயின் பேச்சு போல பாஜகவும் பகல் கனவு காண்கிறது என அதிமுக முன்னாள்…
சினிமாவில் திருமணமான நடிகருடன் நெருக்கமாக இருப்பது, பின்னர் காதலிப்பது கல்யாணம் வரை சென்று பிரிவது என ஏராளமான விஷயங்கள் நடப்பது…
This website uses cookies.