புதுடெல்லி: இந்தியா வரும் சர்வதேச பயணிகளுக்கான கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகளை அறிவித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்தியா வரும் சர்வதேச பயணிகளுக்கான கொரோனா கட்டுப்பாடுகளை மத்திய சுகாதார அமைச்சகம் தளர்த்தியது . இது தொடர்பாக, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது,
2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட சர்வதேச பயணிகளுக்கு 7 நாள் கட்டாய தனிமை இல்லை. கொரோனா தொற்று குறைந்து வருவதால் வெளிநாட்டு பயணிகளுக்கு இனி ஆர்டி-பிசிஆர் பரிசோதனையும் கட்டாயமில்லை.இம்மாதம் 14 ந்தேதி முதல் இந்த புதிய தளர்வு அமலுக்கு வருகிறது என சுகாதாரத்துறை அமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒமைக்ரான் அதிகம் பரவக்கூடிய அபாயம் உள்ள நாடுகள் என பட்டியலிடப்பட்ட நாடுகள் குறித்த பட்டியலை நீக்கம் செய்துள்ளது சுகாதாரத்துறை. வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகள் 14 நாட்கள் சுயமாக தங்கள் உடல் நிலையை கவனித்துக்கொள்ள சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
முன்னதாக, வெளிநாடுகளிலிருந்து இந்திய விமானநிலையங்களில் வந்து இறங்கும் பயணிகள், 72 மணி நேரத்துக்கு முன்னர் எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவுகளை சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இப்போது பயணிகள் தாங்கள் முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழை பதிவேற்றம் செய்து கொள்ளவும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.