ஹிஜாப் சர்ச்சையால் மூடப்பட்ட பள்ளிகள் திறப்பு: மீண்டும் புர்கா அணிந்து வந்த மாணவிகள்…ஆசிரியர்களுக்கும் ஹிஜாப் அணிய தடை..!!

பெங்களூரு: கர்நாடகாவில் ஹிஜாப் சர்ச்சையால் மூடப்பட்டிருந்த 10ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

கர்நாடக மாநிலம் உடுப்பி குந்தாப்புராவில் உள்ள அரசு பி.யூ.கல்லூரியில் மாணவ-மாணவிகள் சீருடை அணிந்து வர வேண்டும் என்று அந்த கல்லூரி நிர்வாகம் கூறியுள்ளது. ஆனால், அந்த கல்லூரியில் பயின்று வந்த இஸ்லாமிய மதத்தை சேர்ந்த மாணவிகள் சிலர் சீருடை மீது ஹிஜாப் அணிந்து வந்தனர்.

இதற்கு அந்த கல்லூரி நிர்வாகம் தடை விதித்தது. அந்த தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய மதத்தை சேர்ந்த அந்த மாணவிகள் பர்தா அணிந்து போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அந்த கல்லூரியில் படிக்கும் இந்து மதத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் காவி துண்டு அணிந்து கல்லூரிக்கு வந்தனர். இதனால், பள்ளி, கல்லூரிக்கு அனைவரும் சீருடை அணிந்து தான் வர வேண்டும் என்று மாநில அரசு உத்தரவிட்டது.

இதனால் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில் கடந்த 9ம் தேதி மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதையடுத்து கர்நாடகத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்குவிடுமுறை அளித்து கர்நாடக அரசு கடந்த 10ம் தேதி உத்தரவிட்டது.

இதனிடையே, ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வர அனுமதிக்க கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவ-மாணவிகள் ஹிஜாப் அல்லது காவித்துண்டு என எந்த வித மத அடையாளங்களையும் வெளிப்படுத்தும் ஆடைகளை அணிந்து வரக்கூடாது என இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.

மேலும், பள்ளி, கல்லூரிகளை திறக்கவும் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து, மாநிலத்தில் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. இருப்பினும், உடுப்பியில் உள்ள அரசு பள்ளியில் இஸ்லாமிய மதத்தை சேர்ந்த சில மாணவிகள் நீதிமன்ற உத்தரவையும் மீறி மீண்டும் புர்கா அணிந்து வகுப்புகளுக்கு செல்லும் நிகழ்வுகளும் அரங்கேறியுள்ளதால் மீண்டும் சர்ச்சை உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

UpdateNews360 Rajesh

Recent Posts

வெகு கால இடைவெளிக்குப் பிறகு டிவி பேட்டியில் தோன்றும் அஜித்! அதிசயம் ஆனால் உண்மை!

பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…

14 minutes ago

Bye Bye Stalin என மக்கள் சொல்லும் போது சட்டை கிழித்து தவழாமல் இருந்தால் சரி : இபிஎஸ் விமர்சனம்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…

28 minutes ago

சிம்புவே ரெடி; ஆனா ஷூட்டிங் ஆரம்பிக்கல! இயக்குனர் செய்த காரியத்தால் தள்ளிப்போகும் STR 49?

STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…

1 hour ago

அஜித் விருது வாங்கிய நேரம்.. ஹீரா குறித்து அவதூறு : பின்னணியில் அரசியலா?

நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…

2 hours ago

அவருக்கு நான் அம்மாவா? கடுப்பான கஸ்தூரி : எந்த நடிகர்னு தெரியுமா?!

தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…

2 hours ago

இவருக்கு இதே வேலையா போச்சு- மோடியை பற்றி பேசிய இளையராஜாவை ரவுண்டு கட்டும் நெட்டிசன்கள்…

நியமன எம் பி இளையாராஜா இசைஞானி என்று தமிழக மக்களால் போற்றப்படும் இளையராஜா, தற்போது நியமன எம் பி ஆகவும்…

3 hours ago

This website uses cookies.