மனைவி மற்றும் காதலியின் நெருக்கடி தாங்க முடியாமல் ரிப்போர்ட்டர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரைச் சேர்ந்தவர் பாரத் மிஸ்ரா. 45 வயதான இவர் தனியார் பத்திரிக்கை ஒன்றில் ரிப்போர்ட்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு 21 வருடங்களுக்கு முன்பு கவுசல்யா என்பவருடன் திருமணமானது. இவருக்கும், மனைவி கவுசல்யாவுக்கும் எந்த நேரமும் சண்டை, சச்சரவாகவே இருந்து வந்துள்ளது.
இதனால், குடும்ப வாழ்க்கையில் வெறுப்புற்று இருந்த மிஸ்ராவுக்கு, பின்சி பெரேரா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு, அது கள்ளக்காதலாக மாறியது. இந்த விஷயம் கவுசல்யாவுக்கு தெரிய வந்ததால், இருவருக்கும் இடையே சண்டை இன்னமும் அதிகமாகியுள்ளது.
அதேவேளையில், கள்ளக்காதலியான பின்சி பெரேராவும் மிஸ்ராவுடன் சண்டை போட ஆரம்பித்துள்ளார். மனைவியும், காதலியும் இப்படி ஆளுக்கு ஒருபக்கம் சண்டை போட்டுக் கொண்டே இருந்ததால் மிஸ்ரா உச்சகட்ட மனவிரக்தியடைந்துள்ளார்.
நேற்று மதியம் கள்ளக்காதலி பெரேராவுடன் செல்போனில் வாக்குவாதம் ஏற்பட்ட பிறகு, வீட்டிற்கு சென்ற மிஸ்ரா, துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலைக்கு முன்பாக தனது பேஸ்புக் பக்கத்தில் மிஸ்ரா விரக்தியான பதிவு ஒன்றையும் போட்டுள்ளார். அதில், என் மனைவி கவுசல்யாவும், காதலி பின்சி பெரேராவும்தான் எனது மரணத்திற்கு காரணம் என்றும், இவர்கள் 2 பேரும் என்னுடைய வாழ்க்கையில் ஏற்படுத்திய குழப்பம்தான் இந்த முடிவை எடுக்க வைத்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.
தனது மனைவி கவுசல்யா எல்லா இடங்களிலும் என்னை அசிங்கப்படுத்தி, இழிவாக நடத்தியதாகக் குறிப்பிட்டுள்ள அவர், மனைவியை விவாகரத்து செய்ய பலமுறை நினைத்ததாகவும், என்னுடைய வயதான அம்மா, அப்பாவுக்காகவும், அவர்களின் மீதான மரியாதைக்காகவும், கவுசல்யா செய்யும் டார்ச்சரை எல்லாம் சகித்துக்கொண்டதாக தெரிவித்துள்ளார்.
அவரை பிரிந்து வந்த பிறகு பின்சி பெரேராவுடன் தொடங்கிய எங்கள் வாழ்க்கை ஆரம்பத்தில் மிகவும் நன்றாக இருந்ததாகவும், ஒருகட்டத்தில், பெரேராவும், என் மனைவி கவுசல்யாவை பற்றி பேச ஆரம்பிக்க, எங்களுக்குள் சண்டை அதிகரிக்க ஆரம்பித்துவிட்டதாக விரக்தியுடன் கூறிய மிஸ்ரா, கவுசல்யாவும், பெரேராவும் என் வாழ்க்கையை நாசமாக்கிவிட்டதாகவும், எனவே தற்கொலை செய்துகொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
இசைப்புயலுக்கு வந்த சோதனை ஏ.ஆர்.ரஹ்மான் என்னும் இசைப்புயல் 32 வருடங்களுக்கு மேல் வீரியம் குறையாமல் வீசிக்கொண்டே இருக்கிறது. இக்கால தலைமுறைக்கும்…
மதுரை மாநகர் கீரைத்துறை காவல்துறையினருக்கு வில்லாபுரம் கிழக்கு தெரு முனியான்டி கோவில் அருகில் உள்ள கருவேலங்காட்டுக்குள் கஞ்சா கடத்தப்படுவதாக கடந்த…
களைகட்டும் கேங்கர்ஸ் சுந்தர் சியும் வடிவேலுவும் இணைந்து கலக்கிய “கேங்கர்ஸ்” திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. கிட்டத்தட்ட…
நடிகர் பாக்யராஜ் முன்னணி இயக்குநர், நடிகராக 80 மற்றும் 90களில் திகழ்ந்தார். இவர் உடன் நடித்த நடிகை பூர்ணிமா ஜெயராமை…
பொள்ளாச்சி அடுத்த ஆழியார் அணைப்பகுதிக்கு சென்னை பூந்தமல்லி சவிதா பிசியோதெரபி கல்லூரியிலிருந்து நான்காம் ஆண்டு படித்து வரும் 25க்கும் மேற்பட்ட…
சிக்ஸ் பேக் வைத்த முதல் நடிகர் சூர்யா நடித்த “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி…
This website uses cookies.