கேரள மாநிலம் மலப்புறத்தில் குண்டும், குழியுமாக காணப்பட்ட சாலையின் நடுவே தேங்கி கிடந்த மழை நீரில் குளித்து, துவைத்து, தவம் செய்து தனது எதிர்ப்பை தெரிவித்த இளைஞரின் வீடியோ வைரல் ஆகி வருகிறது.
கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டத்தில் இருந்து பாலக்காடு செல்லும் பிரதான சாலை பல ஆண்டுகளாக குண்டும், குழியுமாக காணப்பட்டுள்ளது. சம்ந்தப்பட்ட அதிகாரிகளும் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார்.
எனவே இதற்கு எதிர்ப்பு தெருவிக்கும் வகையில் இளைஞர் ஒருவர் புதுவிதமான போராட்டம் ஒன்றை மேற்கொண்டார். பாண்டிக்காடு பகுதியில் சாலையின் நடுவே உள்ள குழியில் தேங்கி கிடந்த மழைநீரில், அதே பகுதியை சார்ந்த கம்சா என்ற இளைஞர் பக்கெட், சோப், மக் உடன் வந்து, தேங்கி கிடந்த நீரில் துணிகளை துவைத்தும், குளித்தும், நீரில் நின்று தவம் செய்யவும் துவங்கியுள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அப்பகுதி சட்டமன்ற உறுப்பினர் லதீப் என்பவர், சாலை உடனடியாக சரி செய்யப்படும் என உறுதி அளித்த பின்பு அந்தப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் சாலை நடுவே தேங்கிய மழை நீரில் விநோதமான முறையில் கவனத்தை ஈர்க்கும் விதமாக நூதன போராட்டத்தை நடத்திய இளைஞரின் செயல் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகின்றன.
கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
This website uses cookies.