கேரளா ஓணம் பம்பர் 2022 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டதும் அனைவருக்கும் ஆச்சரியம் ஏற்பட்டது. ஆட்டோ டிரைவர் ஒருவருக்கு ரூ. 25 கோடி ஜாக்பாட் பரிசு கிடைத்தது.
ஓணம் பம்பர் முடிவுகள் கேரள மாநில லாட்டரி துறையால் அறிவிக்கப்பட்டன. ஞாயிற்றுக்கிழமை மதியம் 2 மணிக்கு அறிவிக்கப்பட்ட இந்த லாட்டரி சீட்டு குலுக்கலில் திருவனந்தபுரத்தில் விற்கப்பட்ட டிக்கெட்டுக்கு முதல் பரிசு ரூ 25 கோடி அறிவிக்கப்பட்டது.
25 கோடி ரூபாய் முதல் ரூ 1,000 வரை என பலதரப்பட்ட பரிசுகள் அறிவிக்கப்பட்டன. முதல் பரிசான ரூ.25 கோடியை திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் வென்றார்.
இரண்டாவது பரிசான ரூ.5 கோடியை கோட்டயத்தைச் சேர்ந்த ஒருவருக்குக் கிடைத்தது. ஓணம் பம்பர் லாட்டரி முடிவு அறிவிக்கப்படதும் அனைவருக்கும் பரபரப்ப்பு ஏற்பட்டது
டி.வி.எம் ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர் மற்றும் கூலியான அனூப் என்பவர் 25 கோடி ரூபாய் வென்றுள்ளார். 32 வயதான அனூப், இந்த லாட்டரி டிக்கெட்டை திருவனந்தபுரத்தில் வாங்கியிருக்கிறார். திருவனந்தபுரத்தில் உள்ள பழவங்காடி பகவதி ஏஜென்சி இந்த லாட்டரி டிக்கெட்டை விற்பனை செய்துள்ளது.
அனூப் பம்பர் குலுக்கல் லாட்டரி சீட்டை நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு வாங்க கடைக்கு சென்றுள்ளார். அப்போது அவரிடம் ரூ.500 இல்லை. பணம் குறைவாக இருந்ததால், வீட்டுக்கு வந்து சேமித்து வைத்து இருந்த உண்டியலை உடைத்து அதிலிருந்த பணத்ைத எடுத்து சென்று லாட்டரி சீட்டை வாங்கியுள்ளார்.
அந்த லாட்டரி சீட்டுக்குதான் தற்போது ரூ.25 கோடி பரிசு கிடைத்து உள்ளது.அவருக்கு வருமான வரி, ஏஜெண்டு கமிஷன் போக ரூ. 15.75 கோடி கிடைக்கும் என்று லாட்டரி உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும் மலேசியிவில் சமையல் வேலை செய்ய செல்ல திட்டமிட்டிருந்ததாகவும், இனி இங்கேய ஹோட்டலை கட்ட வேண்டும், நல்ல வீடு கட்ட வேண்டும் என தனது விருப்பத்தை தெரிவித்தார்.
அரியலூரில் தவணைத் தொகை வசூலிக்கச் சென்ற பைனான்ஸ் ஊழியர் அடித்துக் கொலை செய்யப்பட்ட எரிக்கப்பட்ட சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…
நீலகிரியில், மகளை பாலியல் தொல்லை அளிப்பதற்கு தந்தைக்கு அனுமதித்ததாக தாய் உள்பட இருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். நீலகிரி:…
வீட்டை ஜப்தி செய்ய ஐகோர்ட் உத்தரவு நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும் நடிகருமான துஷ்யந்த் தனது மனைவி அபிராமியுடன்…
நடிகை அளித்த பாலியல் புகார் தொடர்பான விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளதை வரவேற்பதாக சீமான் கூறியுள்ளார். சென்னை:…
100 கோடியை தொட்ட டிராகன் கடந்த பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி ரிலீஸ் ஆன டிராகன் திரைப்படம் எதிர்பார்த்ததை…
விழுப்புரத்தில் டீயில் எலி மருந்து கலந்து கொடுத்து காதலனைக் கொல்ல முயன்ற காதலியை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். விழுப்புரம்:…
This website uses cookies.