ரஷ்யா – உக்ரைன் போரால் இரு அணிகளாக பிரியும் நாடுகள்…? இந்தியா எந்தப்பக்கம்.. நிலைப்பாடு என்ன..?

உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யாவுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், இந்தியா தனது நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளது.

முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா, உக்ரைன் நாட்டின் எல்லையில் சுமார் 2 லட்சம் படை வீரர்களை குவித்தது. இதற்கு உலக நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும், படைகளை வாபஸ் பெற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வந்தது. ஆனால், இதனை எல்லாம் பொருட்படுத்தாத ரஷ்யா அதிபர் புதின் , உக்ரைன் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்டார்.

இதையடுத்து, உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா தாக்குதலை தொடங்கியுள்ளது. சக்தி வாய்ந்த குண்டுகள் மற்றும் ஆயுதங்களால் ராணுவ தளவாடங்களை ரஷ்ய படைகள் தாக்கி வருவதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால், இந்தியர்களை மீட்க உக்ரைன் சென்ற விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.

உக்ரைனில் நிலைமை மோசமாக இருப்பதால், தலைநகர் கீவ்-க்கு இந்தியர்கள் யாரும் வரவேண்டாம் என்று இந்திய தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், இந்தியர்கள் உக்ரைனில் எங்கு இருந்தாலும் பாதுகாப்பான இடங்களில் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த சூழலில், ரஷ்யாவின் இந்த செயலுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி உள்பட 27 நேட்டோ நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும், ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதிக்க முடிவு செய்ததோடு, உக்ரைன் மீது தாக்குதல் நடத்தியதற்கான விளைவை ரஷ்யா எதிர்கொண்டாக வேண்டும் என தெரிவித்துள்ளன.

இதனிடையே, ரஷ்யா தாக்குதல் விவகாரத்தில் இந்தியா தலையிட வேண்டும் என்று உக்ரைன் தூதரகம் வலியுறுத்தியது. உக்ரைன் மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்த ரஷ்ய அதிபர் புடினுக்கு பிரதமர் மோடி பேச வேண்டும் எனக் கூறப்பட்டது. ,இதைத்தொடர்ந்து, உக்ரைன்- ரஷியா போர் குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். மூத்த அமைச்சர்கள், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் அவர் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில், உக்ரைன் – ரஷ்யா போர் விவகாரத்தில் இந்தியா நடுநிலையை வகிக்கும் என்று மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் ஆர்கே சிங் தெரிவித்துள்ளார். மேலும், அமைதியான வழியில் தீர்வு காணப்படும் என நம்புவதாகவும் அவர் கூறினார். இந்தியாவின் இந்த நிலைப்பாட்டிற்கு ரஷ்யா வரவேற்பு தெரிவித்துள்ளது. உக்ரைனுடனான போர் பதற்றத்தால் இந்தியாவுடனான உறவு பாதிக்காது என்றும் விளக்கமளித்துள்ளது.

Babu Lakshmanan

Babu Lakshmanan, is Sub Editor at Updatenews360.com. With a keen eye for detail and a commitment to journalistic integrity, Babu serves as the Sub Editor at Updatenews360.com. Bringing years of experience in the media industry, he specializes in refining news stories to ensure clarity, accuracy, and engagement. Babu's passion for unearthing the truth and presenting it in an accessible manner drives his daily editorial decisions. His background in journalism, coupled with a deep interest in social issues and technological advancements, contributes to his unique editorial perspective. Off the clock, Babu is an avid reader and a cultural enthusiast, constantly exploring new horizons that enrich his professional and personal life. His dedication to impactful journalism makes him a vital part of the Updatenews360 team, where he continues to uphold the standards of reliable and responsible news reporting.

Recent Posts

சம்பளம் பாக்கி வைத்தாரா தனுஷ்? காசு விஷயத்தில் காயப்படுத்திய எஸ்கே… பகீர் சம்பவம்!

சிவகார்த்திகேயன் நடிப்பில் தீபாவளிக்கு வெளியானது அமரன். மேஜர் முகுந்த் வாழ்க்கை வரலாறு திரைப்படம் என்பதால் எதிர்ப்பார்ப்பு எகிறியது. படமும் 100…

6 minutes ago

விதியை மீறிய கோலி..கண்டுக்காத பாகிஸ்.வீரர்கள்…இந்திய அணிக்கு அடித்த லக்.!

ICC விதிமுறையை மீறிய கோலி இந்திய வீரர்களில் சச்சினுக்கு அடுத்தபடியாக தன்னுடைய திறமையால் பல சாதனைகளை நிகழ்த்தி வருபவர் விராட்கோலி,சமீப…

21 minutes ago

வீடு புகுந்து பிரபல ரியல் எஸ்டேட் அதிபருக்கு மிரட்டல்.. நகை, செல்போன் பறிப்பு : கோவையில் பகீர்!

கோவை பொள்ளாச்சி ஜமீன் ஊத்துக்குளி சேர்ந்தவர் ராமசாமி. இவருடைய மகன் தேவ் தர்சன் ரியல் எஸ்டேட் அதிபர். இவர் கோவை,…

1 hour ago

ஒரு மாதத்திற்குள் OTT-க்கு தாவும் விடாமுயற்சி…தேதி குறிச்சாச்சு..!

OTT-யில் விடாமுயற்சி மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் மற்றும் திரிஷா நடிப்பில் வெளிவந்த விடாமுயற்சி திரைப்படத்தின் OTT தேதியை படக்குழு…

1 hour ago

திமுகவிடம் அடகு வைக்கப்பட்ட காங்கிரஸ்.. மூத்த தலைவர்களை விமர்சித்தால்.. தீவிரமடையும் உட்கட்சி விவகாரம்!

திமுகவிடம் காங்கிரஸை செல்வப்பெருந்தகை அடகு வைத்துவிட்டதாக மாணிக்கம் தாகூரின் ஆதரவாளர் கூறியுள்ளது உட்கட்சி விவகாரத்தில் தலைதூக்கியுள்ளது. சென்னை: “திமுகவின் ஆட்சி…

2 hours ago

நிறைய நெருக்கடிகள்.. நாதகவில் இருந்து காளியம்மாள் விலகல்!

நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக, அக்கட்சியின் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளராக இருந்த காளியம்மாள் அறிவித்துள்ளார். சென்னை: நாகப்பட்டினத்தைச்…

3 hours ago

This website uses cookies.