உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யாவுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், இந்தியா தனது நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளது.
முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா, உக்ரைன் நாட்டின் எல்லையில் சுமார் 2 லட்சம் படை வீரர்களை குவித்தது. இதற்கு உலக நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும், படைகளை வாபஸ் பெற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வந்தது. ஆனால், இதனை எல்லாம் பொருட்படுத்தாத ரஷ்யா அதிபர் புதின் , உக்ரைன் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்டார்.
இதையடுத்து, உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா தாக்குதலை தொடங்கியுள்ளது. சக்தி வாய்ந்த குண்டுகள் மற்றும் ஆயுதங்களால் ராணுவ தளவாடங்களை ரஷ்ய படைகள் தாக்கி வருவதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால், இந்தியர்களை மீட்க உக்ரைன் சென்ற விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.
உக்ரைனில் நிலைமை மோசமாக இருப்பதால், தலைநகர் கீவ்-க்கு இந்தியர்கள் யாரும் வரவேண்டாம் என்று இந்திய தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், இந்தியர்கள் உக்ரைனில் எங்கு இருந்தாலும் பாதுகாப்பான இடங்களில் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த சூழலில், ரஷ்யாவின் இந்த செயலுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி உள்பட 27 நேட்டோ நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும், ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதிக்க முடிவு செய்ததோடு, உக்ரைன் மீது தாக்குதல் நடத்தியதற்கான விளைவை ரஷ்யா எதிர்கொண்டாக வேண்டும் என தெரிவித்துள்ளன.
இதனிடையே, ரஷ்யா தாக்குதல் விவகாரத்தில் இந்தியா தலையிட வேண்டும் என்று உக்ரைன் தூதரகம் வலியுறுத்தியது. உக்ரைன் மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்த ரஷ்ய அதிபர் புடினுக்கு பிரதமர் மோடி பேச வேண்டும் எனக் கூறப்பட்டது. ,இதைத்தொடர்ந்து, உக்ரைன்- ரஷியா போர் குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். மூத்த அமைச்சர்கள், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் அவர் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில், உக்ரைன் – ரஷ்யா போர் விவகாரத்தில் இந்தியா நடுநிலையை வகிக்கும் என்று மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் ஆர்கே சிங் தெரிவித்துள்ளார். மேலும், அமைதியான வழியில் தீர்வு காணப்படும் என நம்புவதாகவும் அவர் கூறினார். இந்தியாவின் இந்த நிலைப்பாட்டிற்கு ரஷ்யா வரவேற்பு தெரிவித்துள்ளது. உக்ரைனுடனான போர் பதற்றத்தால் இந்தியாவுடனான உறவு பாதிக்காது என்றும் விளக்கமளித்துள்ளது.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.