தமிழக காவல்துறையில் பல்வேறு பதவிகளை வகித்த சஞ்சய் அரோரா டெல்லி கமிஷ்னராக நியமனம் : மத்திய உள்துறை அறிவிப்பு!!

டெல்லியின் புதிய காவல் ஆணையாளராக சஞ்சய் அரோரா நியமனம் செய்யப்பட்டு உள்ளார். ஐ.பி.எஸ். அதிகாரி ராகேஷ் ஆஸ்தானாவுக்கு பதிலாக அந்த பணியில் வருகிற திங்கட்கிழமை அவர் இணைய உள்ளார்.

தமிழகத்தில் இருந்து 1988ம் ஆண்டு ஐ.பி.எஸ். அதிகாரியாக பணியில் சேர்ந்த அவர், தமிழக போலீசின் பல்வேறு பதவிகளை வகித்தவர். சிறப்பு அதிரடி படை போலீஸ் சூப்பிரெண்டாக, சந்தனகடத்தல் மன்னன் வீரப்பனை பிடிக்கும் பணியில் சிறப்புடன் செயல்பட்டதற்காக முதல்-அமைச்சரின் வீரதீர செயலுக்கான விருதும் பெற்றுள்ளார்.

தேசிய பாதுகாப்பு பணியில் பயிற்சி பெற்ற பின்னர் 1991ம் ஆண்டு சிறப்பு பாதுகாப்பு படை அமைப்பதில் முக்கிய பங்காற்றியவர். எல்.டி.டி.இ. செயல்பாடுகள் நிறைந்த காலத்தில் முதல்-அமைச்சர் பாதுகாப்பு பணியில் இந்த சிறப்பு பாதுகாப்பு படை செயல்பட்டது.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் போலீஸ் சூப்பிரெண்டாகவும் பணியாற்றிய அனுபவம் வாய்ந்தவர். கோவை நகர காவல் ஆணையாளராக 2002ம் ஆண்டு முதல் 2004ம் ஆண்டு வரை பணியாற்றி உள்ளார்.

விழுப்புரம் சரக டி.ஐ.ஜி.யாகவும், ஊழல் கண்காணிப்பு மற்றும் ஒழிப்பு துணை இயக்குனராகவும் அவர் பணிபுரிந்து உள்ளார். கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்டு 31ந்தேதி இந்தோ-திபெத் எல்லை காவல் படையின் டி.ஜி.யாக பதவியேற்ற அவர், ஜனாதிபதியின் காவல் துறை பதக்கம், ஐ.நா. அமைதி குழு பதக்கம் உள்ளிட்ட பல பதக்கங்களையும் பெற்றுள்ளார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

விடாமுயற்சி வசூலை விரட்டி முறியடித்த டிராகன்.. வெறும் 5 நாட்களில்..!!

கடந்த 21ஆம் தேதி பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.…

6 hours ago

எங்க கூட்டணிக்கு வந்தால் விஜய் வெற்றி பெற முடியும்.. அதிமுக கூட்டணி கட்சி தலைவர் கணிப்பு!

கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ் மாநில முஸ்லிம் லீக் அமைப்பின்…

6 hours ago

ஆதியோகி, அறுபத்து மூவர் தேர்களுடன் பாதயாத்திரை வந்த சிவனடியார்கள் : ஈஷாவில் ஆரவாரமான வரவேற்பு!

ஈஷாவில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆதியோகி மற்றும் அறுபத்து மூவர் தேர்களுடன்…

7 hours ago

போலீஸ் ஸ்டேஷனில் புகாரளிக்க வந்த பெண் மானபங்கம்.. நீதிபதி அதிரடி தீர்ப்பு!!

திண்டுக்கல், செம்பட்டி சேடப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி சக்திவேல் இவரது மனைவி கவுசல்யா, 2001ல் இவர்களது பக்கத்து விட்டில் நகை திருடுபோனது,…

7 hours ago

திடீரென ரஜினி கொடுத்த பரிசு.. ஆச்சரியத்தில் ஆடிப்போன இயக்குநர்..!!

இயக்குநர் வினாயக் சந்திரசேகரன் 'குட் நைட்' படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை வலுவாகத் தொடங்கினார். குட் நைட் திரைப்படம்…

8 hours ago

அடுத்தடுத்து மாயமான இளைஞர்கள் கொன்று புதைப்பு.. வெளியான பகீர் தகவல்!

கடலூரில் மாயமான இரண்டு இளைஞர்களை சக நண்பர்களே அடித்துக் கொன்று புதைத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடலூர்: கடலூர் மாவட்டம்,…

8 hours ago

This website uses cookies.