கர்நாடகா: நீதிமன்றம் மற்றும் அரசின் உத்தரவையும் மீறி பள்ளிகளுக்கு ஹிஜாப் அணிந்து வந்து மாணவிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
கர்நாடகாவில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாக் அணிந்து வருவதற்கு பள்ளிகள் தடை விதிக்கப்பட்ட சம்பவம் கடந்த வாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. ஹிஜாப் விவகாரத்திற்கு எதிராக இந்து மாணவ, மாணவிகள் காவி அணிந்து பள்ளிக்கு வந்தது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஹிஜாப் விவகாரத்தில் தொடர்ந்த பதற்றமான சூழல் காரணமாக கடந்த பிப்.8ம் தேதி முதல் கர்நாடகத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் கர்நாடக உயர்நீதிமன்றம் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவ-மாணவிகள் ஹிஜாப் அல்லது காவித்துண்டு என எந்த வித மத அடையாளங்களையும் வெளிப்படுத்தும் ஆடைகளை அணிந்து வரக்கூடாது என இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.
இதனை தொடர்ந்து, மாநிலத்தில் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. மாண்டியா மாவட்டத்தில் உள்ள ரோட்டரி பள்ளியில் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளை பள்ளியின் நுழைவு வாயிலிலேயே ஆசிரியர் தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து, பள்ளி வகுப்பறைக்குள் அனுமதிக்குமாறும், வகுப்பறைக்கு சென்ற பின் குழந்தைகள் ஹிஜாப் அணிய மாட்டார்கள் எனவும் பெற்றோர்கள், ஆசிரியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதேபோல, ஷிமோகாவில் உள்ள பள்ளி ஒன்றில் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவை பின்பற்றுவதாக கூறி கல்வித்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். மேலும், மாணவிகள் ஹிஜாபை கழற்ற மறுத்துவிட்டதால் பள்ளிக்குச் செல்லாமல் வீட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது GOOD BAD UGLY திரைப்படம். மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்த…
மாஸ் ஓப்பனிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று உலகம் முழுவதும்…
நடிகர் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது. விடாமுயற்சிக்கு பிறகு வெளியாகும் படம் என்பதால்…
ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் மிட்டபாளம் எஸ்.சி. காலனியைச் சேர்ந்த அஜய் என்ற இளைஞரை சந்திரகிரி மண்டலம் நரசிங்காபுரத்தை சேர்ந்த…
ஏழ்மையான நிலை… ஒரு காலகட்டத்தில் பல திரைப்படங்களில் பணியாற்றிய நடிகர்களுக்கு திடீரென வாய்ப்பில்லாமல் போய்விடும். அந்த சமயங்களில் அவர்களுக்கு உதவி…
பிசியான நடிகர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்துள்ள சிவகார்த்திகேயன் தற்போது “பராசக்தி”, “மதராஸி” போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.…
This website uses cookies.