மாற்றுத்திறனாளியின் குடும்பத்திற்கு உதவுவதற்காக தெருவில் பாட்டு பாடிய 10ம் வகுப்பு மாணவியின் செயல் பாராட்டுக்களை பெற்றுள்ளது.
கேரளா – பாலக்காடு அருகே உள்ள நிலம்பூரியில் ஒலிபெருக்கி பொருத்தப்பட்ட ஆட்டோ ஒன்று சாலையோரமாக நிறுத்தப்பட்டிருந்தது. அதில் இருந்த மாற்றுத்திறனாளி ஒருவர் பாடல் பாடிக் கொண்டிருந்த நிலையில், அவரது மனைவி குழந்தையுடன் யாசகம் கேட்டுக் கொண்டிருந்தார். பாடலுக்கு நடுவே தனது குடும்ப நிலையையும் கூறி அவர்கள் யாசகம் பெற்றுக் கொண்டிருந்தனர்.
அந்த சமயம், 10ம் வகுப்பு பயிலும் ஆதிரா என்ற மாணவி தனது தந்தையுடன் படிப்புக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக அங்கு வந்தார். அப்போது, அங்கு நடக்கும் நிகழ்வை பொறுமையுடன் பார்த்துக் கொண்டிருந்தார்.
தன்னுடைய குரல் மங்கிய நிலையிலும் அந்தப் பெண் தொடர்ந்து பாடல் பாட முயன்றதை அறிந்த ஆதிரா, தனது தந்தையுடன் இணைந்து அவருக்கு டீ வாங்கிக் கொடுத்து சாப்பிடும் படி கூறியுள்ளார். அதோடு, அவரை ஓய்வெடுக்குமாறு கூறிவிட்டு, மைக்கில் அந்தப் பெண்ணின் குடும்பத்திற்காக ஆதிரா பாடல் பாடினார்.
தெருவில் யாசிக்கும் ஏழைக் குடும்பத்திற்காக மாணவி ஆதிரா இரண்டு பாடல்களை பாடினார். மாணவி பாடல் பாடுவதை அவ்வழியாக சென்றவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். இந்த வீடியோ வைரலான நிலையில், ஆதிரா படிக்கும் பள்ளிக்கே சென்று பலர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.