கேரள மாநிலம் கொச்சியில், வெளி மாநில தொழிலாளர்கள் வசித்து வரும் அடுக்குமாடி குடியிருப்பில், பீஹாரைச் சேர்ந்த தொழிலாளி, மனைவி மற்றும் 5 வயது மகளுடன் வசித்து வந்தார்.
கடந்த ஜூலை 28 ல் பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த அஸ்பக் ஆலம் என்பவன், ஜூஸ் வாங்கி தருவதாகக் கூறி, சிறுமியை அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்த பிறகு கொலை செய்தான்.
சிறுமி உடல், கோணிப்பையில் அடைக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. இச்சம்பவம் கேரளாவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.
குற்றவாளி அஸ்பக் ஆலம் மீது பலாத்காரம், கடத்தல், கொலை, ஆதாரங்களை அழித்தல் உள்ளிட்ட 13 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவன் மீதான வழக்கு எர்ணாகுளம் போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி கே. சோமன், அஷ்பாக் ஆலமுக்கு தூக்கு தண்டனையும், 5 ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பு வழங்கினார். சம்பவம் நடந்து 109 நாட்களில் தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.