கட்டிடக் கலைஞராகப் பணிபுரியும் 30 வயது பெண் ஒருவர் ஏப்ரல் 21 அன்று பெங்களூரு இந்திராநகர் பகுதிக்கு ரேபிடோ பைக் டாக்ஸியை முன்பதிவு செய்தார்.
அப்போது பெண் இருக்கும் இடத்திற்கு வந்த ரேபிடோ ஓட்டுநர்., OTP செக் பண்ணணும் உங்க செல்போனை கொடுங்க என கூறி, அதில் பெண் செல்லும் இடத்தை மாற்றியுள்ளார்.
பின்னர் தனது இருசக்கர வாகனத்தில் பெண்ணை அமர வைரத்து வேறு வேறு வழிகளில் அழைத்து சென்றுள்ளார். அப்போது அந்த பெண் ஏன் வேறு வழியில் அழைத்து செல்கிறீர்கள் என கேட்டதற்கு, ரேபிடோ ஓட்டுநர் எந்த பதிலும் சொல்லவில்லை.
இதையடுத்து சுதாரித்துக் கொண்ட அந்த பெண், ஓட்டுநரிடம் இருந்து தனது செல்போனை எடுத்து தனது நண்பருக்கு உதவி கேட்டுள்ளார். அப்போது ஓட்டுநர் சில்மிஷத்தில் ஈடுபட முயற்சித்துள்ளார். உடனே அந்த பெண் இருசக்கர வாகனத்தில் இருந்து குதித்து தப்பியுள்ளார்.
பிஎம்எஸ் கல்லூரி அருகே இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இது தொடர்பான காட்சிகள் அந்த வழியாக பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
இதையடுத்து பெண் கொடுத்த புகாரையடுத்து, ஆந்திராவை சேர்நத் தீபக் ராவ் என்ற ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில், அந்த பெண்ணை வேறு வேறு வழிகளில் அழைத்து சென்று சில்மிஷத்தில் ஈடுபட முயற்சித்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து, பாலியல் அத்துமீறல், கடத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…
AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…
This website uses cookies.