கட்டிடக் கலைஞராகப் பணிபுரியும் 30 வயது பெண் ஒருவர் ஏப்ரல் 21 அன்று பெங்களூரு இந்திராநகர் பகுதிக்கு ரேபிடோ பைக் டாக்ஸியை முன்பதிவு செய்தார்.
அப்போது பெண் இருக்கும் இடத்திற்கு வந்த ரேபிடோ ஓட்டுநர்., OTP செக் பண்ணணும் உங்க செல்போனை கொடுங்க என கூறி, அதில் பெண் செல்லும் இடத்தை மாற்றியுள்ளார்.
பின்னர் தனது இருசக்கர வாகனத்தில் பெண்ணை அமர வைரத்து வேறு வேறு வழிகளில் அழைத்து சென்றுள்ளார். அப்போது அந்த பெண் ஏன் வேறு வழியில் அழைத்து செல்கிறீர்கள் என கேட்டதற்கு, ரேபிடோ ஓட்டுநர் எந்த பதிலும் சொல்லவில்லை.
இதையடுத்து சுதாரித்துக் கொண்ட அந்த பெண், ஓட்டுநரிடம் இருந்து தனது செல்போனை எடுத்து தனது நண்பருக்கு உதவி கேட்டுள்ளார். அப்போது ஓட்டுநர் சில்மிஷத்தில் ஈடுபட முயற்சித்துள்ளார். உடனே அந்த பெண் இருசக்கர வாகனத்தில் இருந்து குதித்து தப்பியுள்ளார்.
பிஎம்எஸ் கல்லூரி அருகே இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இது தொடர்பான காட்சிகள் அந்த வழியாக பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
இதையடுத்து பெண் கொடுத்த புகாரையடுத்து, ஆந்திராவை சேர்நத் தீபக் ராவ் என்ற ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில், அந்த பெண்ணை வேறு வேறு வழிகளில் அழைத்து சென்று சில்மிஷத்தில் ஈடுபட முயற்சித்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து, பாலியல் அத்துமீறல், கடத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
ஃபேமிலி மேன் 1, ஃபேமிலி மேன் 2 வெற்றியைத் தொடர்ந்து ஃபேமிலி மேன் 3 உருவாகி வருகிறது. இந்த வெப்…
நானியின் HIT பிரபல தெலுங்கு நடிகரான நானி நடித்த “HIT:The Third Case” திரைப்படம் வருகிற மே 1 ஆம்…
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகராட்சிக்கு உட்பட்ட சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், திருக்கோவிலூர் ஒன்றிய பாக முகவர்கள்…
டாப் நடிகை சமீப காலமாக தென்னிந்திய சினிமாவின் டாப் நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தற்போது தெலுங்கில் “மா இன்டி…
தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் இருந்து திருப்பதிக்கு ராயலசீமா எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டுருந்தது. இந்த ரயில் அனந்தபுரம் மாவட்டம் குத்தி…
இதயத்தை பதறவைத்த சம்பவம் காஷ்மீரின் பகல்ஹாம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பலியான சம்பவம் இந்தியா மட்டுமல்லாது…
This website uses cookies.