Categories: இந்தியா

“மனைவியின் இறப்பு-துக்கத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட உள்துறை செயலாளர்”!

அசாம் மாநிலம் கவுகாத்தியில், அசாம் உள்துறை மற்றும் அரசியல் செயலராக ஷிலாத்யா சேத்யா ஐபிஎஸ் பதவி வகித்து வந்தார். 44 வயதான இவரது மனைவி போர்பருவா, இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வந்துள்ளார். ஷிலாத்யா தனது மனைவியை பல்வேறு இடங்களுக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளார். ஆனாலும் அவரது மனைவியின் உடல்நிலையில் எந்த ஒரு மாற்றமும் ஏற்படவில்லை. தொடர்ந்து உடல்நிலை மோசமாகவே இருந்துள்ளது. சமீபத்தில் கவுகாத்தியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக icu-வில் அனுமதித்திருந்தபோதும் கூட கடந்த சில நாட்களாக போர்பருவாவின் உடல் மிகவும் மோசமடைந்து வந்துள்ளது. இந்நிலையில், நேற்று மாலை 4.25 மணியளவில் சிகிச்சை பலனின்றி போர்பருவா இறந்திருக்கிறார்.மனைவி இறந்த செய்தி கேட்டதும் மருத்துவமனைக்கு வந்த ஷிலாத்யா, “எனது மனைவிக்கு அஞ்சலி செலுத்தவேண்டும். ஆகையால் எனக்கு தனிமை வேண்டும்” என்று மருத்துவமனை ஊழியர்களிடம் கேட்டுள்ளார். அவர்களும், ICU-வில் இருந்த ஊழியர்கள் வெளியே சென்றுள்ளனர்.அடுத்த சில நிமிடங்களில் உள்ளிருந்து துப்பாக்கி சத்தம் கேட்கவும், ஊழியர்கள் அலறி அடித்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்த போது அங்கு ஷிலாத்யா சேத்யா தனது துப்பாக்கியால் தன்னை தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்உள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

ஷிலாத்யா சேத்யாவுக்கு, போர்பருவாருடன் கடந்த 2013ல் திருமணம் நடந்து தற்போது வரை குழந்தை பிறக்கவில்லை. மேலும் சமீபத்தில் இவர் தாயாரும், இவரது மாமியாரும் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர். வேலை பளு, குழந்தையின்மை, மனைவியின் உடல்நிலை, அடுத்தடுத்து நடந்த அசம்பாவிதங்கள் அனைத்தும் ஷிலாத்யாவிற்கு மன உளைச்சலை ஏற்படுத்தி தற்கொலைக்கு காரணமாக இருந்திருக்கலாம் என கூறப்படுகிறது.ஷிலாத்யா சேத்யா கிரிமினல் மற்றும் பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக பல நடவடிக்கைகளை மேற்கொண்டவர். அதற்காக 2015ல் குடியரசுத்தலைவரின் கையால் காவல்துறை பதக்கத்தைப் பெற்றவர்.

ஐபிஎஸ் அதிகாரியான இவர் குடியரசுத்தலைவரின் வீரப்பதக்கம் பெற்றிருந்தவர் என்பது குறிப்பித்தக்கது. கடந்த 4 மாதங்களாக மனைவிக்காக அவர் விடுப்பிலேயே இருந்திருக்கிறார் என தெரிகிறது.ஷிலாத்யா சேத்யா கிரிமினல் மற்றும் பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக பல நடவடிக்கைகளை மேற்கொண்டவர். அதற்காக 2015ல் குடியரசுத்தலைவரின் கையால் காவல்துறை பதக்கத்தைப் பெற்றவர். ஐபிஎஸ் அதிகாரியான இவர் குடியரசுத்தலைவரின் வீரப்பதக்கம் பெற்றிருந்தவர் என்பது குறிப்பித்தக்கது. கடந்த 4 மாதங்களாக மனைவிக்காக அவர் விடுப்பிலேயே இருந்திருக்கிறார் என தெரிகிறது. “காக்கிச் சட்டையிலும் இவ்வளவு காதலா?!” என இச்சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது

Sangavi D

Share
Published by
Sangavi D

Recent Posts

அது ‘அதற்காக’ எடுக்கப்பட்ட வீடியோ.. விக்ரமன் மனைவி பரபரப்பு பேட்டி!

பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…

10 hours ago

யார் அந்த சூப்பர் முதல்வர்? காரசாரமான மக்களவை.. ஸ்டாலினுக்கு அண்ணாமலை 3 கேள்விகள்!

ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…

11 hours ago

பள்ளி மாணவருக்கு 6 இடங்களில் வெட்டு.. துண்டான விரல்.. ஸ்ரீவைகுண்டம் அருகே பரபரப்பு!

தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…

13 hours ago

விஜயால் ஏ.ஆர்.முருகதாஸுக்கு வந்த பெரும் சிக்கல்.. இதுதான் முடிவு!

சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…

14 hours ago

ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட பாஜக நிர்வாகி.. வயல்வெளியில் நடந்த கொடூர சம்பவம்!

ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…

14 hours ago

போக்சோ கைதி திடீர் மரணம்.. கோவை மத்திய சிறையில் அடுத்தடுத்து உயிரிழப்புகளால் அதிர்ச்சி!

கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

15 hours ago

This website uses cookies.