இலவச டிக்கெட் வாங்க வந்த பக்தர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி : திருப்பதி மலையில் போராட்டம்.. போலீசாருடன் வாக்குவாதம்!!

திருப்பதி : இலவச தரிசன கவுண்டர் மூடப்பட்டது மற்றும் திருப்பதி மலைக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால் திருப்பதி மலை அடிவாரத்தில் தேவஸ்தான விஜிலென்ஸ் ஊழியர்கள் மற்றும் போலீசாருடன் பக்தர்கள் வாக்குவாதம் நடத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இம் மாதம் 12ஆம் தேதி வரை ஏழுமலையானை இலவசமாக தரிசிப்பதற்கு தேவையான இலவச தரிசன டிக்கெட்டுகள் நேற்று திருப்பதி உள்ள கவுண்டர்களில் பக்தர்களுக்கு வழங்க முடிக்கப்பட்டன.

இந்த நிலையில் திருப்பதியில் செயல்பட்டு வந்த இலவச தரிசன டிக்கெட் வழங்கும் கவுண்டர்களும் நேற்று மூடப்பட்டன. இந்த நிலையில் கவுண்டர்கள் மூடப்பட்டது தெரியாமல் ஏராளமான பக்தர்கள் வழக்கம் போல் இன்றும் இலவச தரிசன டிக்கெட்டுகள் வாங்குவதற்காக திருப்பதிக்கு வந்தனர்.

கவுண்டர்கள் மூடப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பக்தர்கள் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் விழிபிதுங்கி நின்றனர். இந்த நிலையில் திருப்பதி மலைக்கு சென்று ஏழுமலையான் கோவில் முன் நின்று மானசீகமாக இறை வழிபாடு நடத்தி ஊர் திரும்பலாம் என்று அவர்களில் பலர் முடிவு செய்தனர்.

எனவே அவர்கள் திருப்பதி மலைக்கு செல்ல புறப்பட்டனர். ஆனால் மலையடிவாரத்தில் இருக்கும் அலிப்பிரியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள தேவஸ்தான விஜிலென்ஸ் ஊழியர்கள் மற்றும் போலீசார் ஆகியோர் டிக்கெட் இல்லாதவர்களை திருப்பதி மலைக்கு அனுப்பிவைக்க மறுப்பு தெரிவித்தனர்.

மேலும் நாளை பதினோராம் தேதி ஏழுமலையானை தரிசிக்க தேவையான டிக்கெட்டுகளுடன் வரும் பக்தர்கள் மட்டுமே திருப்பதி மலைக்கு செல்ல வேண்டும்.

12ஆம் தேதி சாமி கும்பிடுவதற்கு தேவையான டிக்கெட்டுகளை வைத்திருக்கும் பக்தர்கள் நாளை காலை முதல் திருப்பதி மலைக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் தெரிவித்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பக்தர்கள் தேவஸ்தான ஊழியர்கள் மற்றும் போலீசார் ஆகியோருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் மலையடிவாரத்தில் சாலையில் நின்றவாறு அங்கிருந்து செல்ல இயலாது என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆனால் உயர் அதிகாரிகளின் வழிகாட்டுதல் இல்லாமல் நாங்கள் உங்களை திருப்பதி மலைக்கு செல்ல அனுமதிக்க இயலாது என்று அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் பக்தர்களிடம் கண்டிப்பாக கூறிவிட்டனர்.

இதனால் இலவச தரிசன டிக்கெட்டுகளை வாங்குவதற்காக இன்று திருப்பதிக்கு வந்த பக்தர்கள் மற்றும் 12ஆம் தேதி ஏழுமலையானை வழிபடும் வகையில் இலவச தரிசன டிக்கெட்டுகளை வாங்கிய பக்தர்கள் ஆகியோர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் ஊர் திரும்பி செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

படத்துல என்ன பிரச்சனை, உங்க கருத்தை சொல்லுங்க- பப்ளிக்கை நேரடியாக சந்தித்த சல்மான் கான்!

படுதோல்வியடைந்த படம் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் உருவான “சிக்கந்தர்” திரைப்படம் கடந்த மார்ச் மாதம் 30 ஆம்…

12 hours ago

நீட் தேர்வுக்கான அனைத்துக்கட்சி கூட்டம் ஒரு நாடகம்.. இபிஎஸ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளது. அனைத்து கட்சிகளும் பங்கேற்று ஒரு…

12 hours ago

அட்லீ-அல்லு அர்ஜுன் படத்துக்கு இவர்தான் மியூசிக்கா? பிளாஸ்ட்டா இருக்கே!

பிரம்மாண்ட படைப்பு அட்லீ அல்லு அர்ஜுனை வைத்து இயக்கவுள்ள திரைப்படத்தின் அதிகாரப்பூர்வை அறிவிப்பு வீடியோ ஒன்றைல் இன்று சன் பிக்சர்ஸ்…

13 hours ago

இந்த படத்தை தடை செய்ய வேண்டும்! சட்டசபையில் எழுந்த விவாதம்- இப்படி எல்லாம் நடந்திருக்கா?

தடை செய் தடை செய்… தமிழ் சினிமா உலகில் பல திரைப்படங்களுக்கு பல காரணங்களுக்காக தடை விதிக்க வேண்டும் என…

15 hours ago

சுயமரியாதை இருந்தால் ஆளுநர் மாளிகையைவிட்டு வெளியே போங்க : ஆர்எஸ் பாரதி காட்டம்!

தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டு வந்தார். இதனால் தமிழக அரசு - ஆளுநருக்கும் மோதல்…

15 hours ago

This website uses cookies.