9 வயது சிறுமியை தெருநாய்கள் கடித்து குதறிய அதிர்ச்சி : பதை பதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி!!!

கேரளா மாநிலம் கண்ணூரில் 9 வயது சிறுமியை தெரு நாய்கள் கூட்டமாக கடித்து இழுத்துச் செல்லும் காட்சி காண்போரை பதபதைக்க வைத்துள்ளது.

கேரளா மாநிலம் கண்ணூர் முழபிலாங்காடு பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பத்து வயது வாய் பேச முடியாத சிறுவனை தெரு நாய் கடித்து கொன்ற நிலையில் அதே பகுதியில் மீண்டும் தெரு நாய் தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது.

பாச்சாக்கரை எல்பி பள்ளியில் 3-ம் வகுப்பு படிக்கும் ஜான்விக் என்ற மாணவியை தெருநாய் கடித்துள்ளது. மூன்று தெருநாய்கள் சேர்ந்து சிறுமியை கடித்து தாக்கின.

வீட்டு முன்பு விளையாடி கொண்டிருந்த சிறுமியை நாய்கள் கடித்து இழுத்துச் செல்ல முயன்ற தாக்குதல் சம்பவம் தொடர்பான பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் மற்றும் வீட்டில் உள்ளவர்கள் ஓடி வந்தனர். இதனை தொடர்ந்து நாய்கள் பின்வாங்கின.

தெரு நாய்கள் கடித்த சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். குழந்தையின் தலை, வயிறு, தொடை மற்றும் கைகளில் ஆழமான காயம் ஏற்பட்டது.

சில நாட்களுக்கு முன், கண்ணூர் முழுபிலங்காட்டில் இதே பகுதியில் தெருநாய்கள் தாக்கியதில் பத்து வயது நிஹால் என்ற சிறுவன் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக குழந்தைகள் உரிமை ஆணையம் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது. நிஹாலின் மரணத்திற்குப் பிறகு, முழுபிலாங்காடு பகுதியில் இருந்து சுமார் 31 தெருநாய்கள் பிடிக்கப்பட்டன.

கேரளாவில் பல்வேறு இடங்களில் தெரு நாய்கள் கடித்து பலர் உயிரிழந்தனர். அதே போல் நூற்றுக்கணக்கான மக்கள் காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து மக்களின் உயிர் பறிக்கும் தெரு நாய்களை கொல்ல சட்ட திருத்தம் கொண்டு வந்து அரசு நடவைக்கை எடிக்க வேண்டும் என பொது மக்கள் தரப்பில் கோரிக்கை விடுத்து வருகினறனர்.

சில நாட்களுக்கு முன், கண்ணூர் முழுபிலங்காட்டில் இதே பகுதியில் தெருநாய்கள் தாக்கியதில் பத்து வயது நிஹால் என்ற சிறுவன் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக குழந்தைகள் உரிமை ஆணையம் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது. நிஹாலின் மரணத்திற்குப் பிறகு, முழுபிலாங்காடு பகுதியில் இருந்து சுமார் 31 தெருநாய்கள் பிடிக்கப்பட்டன.

முன்னதாக, விலங்குகள் வதை தடுப்புச் சட்டம் 1960இன் கீழ், விலங்கு இனவிருத்தி கட்டுப்பாடு விதிகளை மத்திய அரசு வெளியிட்டது. இந்த விதிகளின்படி சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் தெரு நாய்களுக்கு கருத்தடை மற்றும் தடுப்பூசி போடுவதற்கான விலங்கு இனவிருத்தி கட்டுப்பாடு திட்டப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். இது போன்ற பணிகளை மேற்கொள்ளும் போது விலங்குகளை வதை செய்யும் பிரச்சனையும் தீர்க்கப்பட வேண்டும்.

இந்த விதிகளை முறையாக அமல்படுத்தி, விலங்கு இனவிருத்தி கட்டுப்பாடு திட்டத்தை (Animal Birth control programme) உள்ளாட்சி அமைப்புகள் செயல்படுத்தலாம். இதன் மூலம் விலங்குகள் பாதுகாப்பு சம்பந்தமான விஷயங்களில் கவனம் செலுத்தப்பட்டு, தெரு நாய்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

அடுக்கடுக்காய் விழுந்த விக்கெட்…மிரட்டி விட்ட இந்திய பௌலர்கள்…!

திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…

7 hours ago

நான் பார்க்காத பிரச்சனையா..’டிராகன்’ பட இயக்குனருக்கு சிம்பு கொடுத்த தரமான அட்வைஸ்.!

தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…

8 hours ago

கோபத்தில் நடிகர் உன்னிமுகுந் எடுத்த முடிவு…தீயாய் பரவும் வீடியோ..!

ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…

9 hours ago

டிராகன் Vs NEEK பந்தயத்தில் வசூல் வேட்டையை நிகழ்த்தியது யார்.!

வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…

10 hours ago

சண்டக்கோழி படத்தில் நடிக்க மறுத்த நடிகர்கள்…இயக்குனர் லிங்குசாமி ஓபன் டாக்.!

விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…

11 hours ago

IND Vs PAK:வெற்றி யார் பக்கம்…அனல் பறக்கும் ஆட்டத்தை பார்க்க படையெடுக்கும் ரசிகர்கள்.!

அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…

12 hours ago

This website uses cookies.