ஜம்மு காஷ்மீரில் பள்ளிக்கூடத்தில் வைத்து துப்பாக்கிச்சூடு : வெளிமாநில தொழிலாளிகளை குறி வைத்து பயங்கரவாதிகள் அட்டூழியம்!!

ஜம்மு மற்றும் காஷ்மீரில் பள்ளி ஒன்றில் வெளிமாநில தொழிலாளிகளை குறிவைத்து பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.
ஜம்மு மற்றும் காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு 3 ஆண்டுகள் ஆன நிலையில், பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்களும் குடியிருந்தும், பணியாற்றியும் வருவது அதிகரித்துள்ளது.

இந்த சூழலில், பயங்கரவாதிகள் காஷ்மீரி பண்டிட்டுகளை இலக்காக கொண்டு தாக்குதல் நடத்த தொடங்கினர். இந்த ஆண்டில் அவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் அதிகரித்து காணப்படுகிறது.

இதனை தொடர்ந்து, வெளிமாநில மக்கள் வெளியேற வேண்டும் என்றும் அவர்கள் மீது தாக்குதல் தொடரும் என்றும் பயங்கரவாதிகள் அவ்வப்போது எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த சூழலில் அனந்த்நாக் மாவட்டத்தில் போந்தியால்கம் பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் இன்று மாலை பயங்கரவாதிகள் அதிரடியாக புகுந்து துப்பாக்கி சூடு நடத்தினர்.

இந்த தாக்குதலுக்கு, புலம்பெயர் தொழிலாளர்களான 2 பேர் இலக்காகி உள்ளனர். படுகாயம் அடைந்த அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.

அவர்களில் ஒருவர் பீகாரை சேர்ந்தவர் என்பதும், மற்றொரு நபர் அண்டை நாடான நேபாளத்தில் இருந்து வந்தவர் என தெரிய வந்துள்ளது. இதனை காஷ்மீர் மண்டல போலீசார் டுவிட்டரில் உறுதிப்படுத்தி உள்ளனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

ரோகித்தின் மோசமான உலக சாதனை.. தீயான குல்தீப் யாதவ்.. திணறிய நியூசிலாந்து.. இந்தியாவுக்கு 252 ரன்கள் இலக்கு

ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து அதிக போட்டிகளில் ஒரு முறைகூட டாஸ் வெல்லாத கேப்டன் என்ற பிரைன் லாராவின் மோசமான உலக…

1 hour ago

மனவருத்தம் இல்லை.. ராஜ்ய சபா சீட் விவகாரத்தில் பிரேமலதா அதிரடி பதில்!

ராஜ்ய சபா சீட் பெறுவது தொடர்பாக அதிமுக உடன் எந்த வருத்தமும் இல்லை என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா…

2 hours ago

திடீரென மொட்டையடித்த சுந்தர்.சி.. ரூ.1 லட்சம் நன்கொடை.. விறுவிறுப்படையும் மூக்குத்தி அம்மன் 2!

சுந்தர் சி - குஷ்பூ தம்பதியின் 25வது திருமண நாளை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம்…

4 hours ago

கூட்டணி குறித்து கேட்டால் இதைச் சொல்லுங்க.. அதிமுகவிடம் எதிர்பார்ப்பு.. முக்கிய காய் நகர்த்தும் இபிஎஸ்

அதிமுகவின் சாதனைகளை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் திண்ணைப் பிரச்சாரத்தை தீவிரப்படுத்த வேண்டும் என இபிஎஸ் அறிவுறுத்தியுள்ளார். சென்னை: அதிமுக மாவட்ட…

6 hours ago

வாய்க்காலில் கிடந்த சடலம்.. சிக்கிய நண்பர்கள்.. திருட்டால் பறிபோன உயிர்!

கடலூர் அருகே திருடச் சென்றபோது ஒருவர் உயிரிழந்ததற்கு காரணமாக இருந்ததாக அவரது நண்பர்கள் மூவர் உள்பட 4 பேர் கைது…

6 hours ago

மேட்ச் முடிவில் காத்திருக்கும் அதிர்ச்சி.. டாப் 3 வீரர்களின் நிலைப்பாடு என்ன?

இந்தியா - நியூசிலாந்து சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டிக்குப் பிறகு ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் கேன் வில்லியம்சன்…

7 hours ago

This website uses cookies.