மாரடைப்பால் மறைந்த பின்னணி பாடகர் கே.கே.வின் உடல் மும்பையில் உள்ள வெர்சோவா பிளாசாவில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது
தமிழ் சினிமாவில் 50க்கும் மேற்பட்ட பாடல்களை பாடிய கிருஷ்ணகுமார் குன்னத், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடி ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ளார். காதல் மற்றும் கானா பாடல்களின் மூலம் தனக்கென்று ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர்.
நேற்று கொல்கத்தா நஸ்ருல் மஞ்சாவில் நடைபெற்ற கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல பாடல்களை பாடினார். பின்னர், இரவு 10.30 மணியளவில் தான் தங்கியிருந்த அறைக்கு சென்ற கே.கே., நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதையடுத்து, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
அவரது உயிரிழப்பு திரையுலகிற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள வேளையில், கே.கே.வின் மரணம் இயற்கைக்கு மாறானது என்று போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவக்கியுள்ளனர்.
இதனிடையே, நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்ட கே.கே.வின் உடலுக்கு மேற்கு வங்க அரசின் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர், கொல்கத்தாவில் இருந்து மும்பைக்கு அவரது உடல் அனுப்பி வைக்கப்பட்டது.
நேற்றிரவு மும்பை வந்த பாடகர் கே.கே.வின் உடல் வெர்சோவா பிளாசாவில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று மதியம் 1 மணி அளவில் வெர்சோவா தகன மையத்தில் கே.கே.வின் உடல் தகனம் செய்யப்பட்டுள்ளது.
20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…
நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…
உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
This website uses cookies.