திருமணம் செய்யுமாறு நபர் ஒருவர் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்த நிலையில், நீதி கேட்டு முதலமைச்சருக்கு சிறுமி ஒருவர் கடிதம் எழுதிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசம் – கன்னாஜ் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் தினமும் பள்ளிக்கு சென்று வருகிறார். இவர் பள்ளிக்கு செல்லும் வழியில் சக்லைன் என்ற நபர் தகாத சைகைகளை காண்பித்து தொல்லை அளித்து வந்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி, இது தொடர்பாக தன்னுடைய குடும்பத்தினரிடம் கூறியுள்ளார். இதையடுத்து, சிறுமியின் குடும்பத்தினர் அந்த நபரின் வீட்டிற்கு சென்று அவரது உறவினர்களிடம் கூறியுள்ளனர். ஆனால், அவரது உறவினர்கள் குற்றம் சாட்டப்பட்டவருடன் சிறுமியை அவருக்கு திருமணம் செய்து வைக்குமாறு கூறியுள்ளனர். இதைத் தொடர்ந்து, அந்த நபரும் சிறுமியை திருமணம் செய்து வைக்குமாறு தொந்தரவு செய்யத் தொடங்கினார்.
இதுகுறித்து உள்ளூர் போலீசாரிடம் புகாரளித்தும் அவர்கள் எந்த வித நடவடிக்கையும் எடுக்காததால் சிறுமியின் குடும்பத்தினர் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
இதனிடையே, கன்னாஜ் காவல் கண்காணிப்பாளர் சிறுமியின் புகார் மீது வழக்குப் பதிவு செய்து, குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைத்துள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…
This website uses cookies.