ராஜஸ்தான் : ராஜஸ்தானில் பாம்பு கடித்ததில் பாம்பு பிடிக்கும் நபர் பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஷாரு மாவட்டத்தைச் சேர்ந்த வினோத் திவாரி (45) என்பவர் கடந்த 20 ஆண்டுகளாக பாம்பு பிடிக்கும் வேலையில் ஈடுபட்டு வருகிறார். பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளில் உலா வரும் பாம்புகளை பிடித்து, அருகில் உள்ள வனப்பகுதியில் கொண்டு சென்று விடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
அந்த வகையில், ஷாரு மாவட்டத்தின் கொஹமெடி பகுதியில் உள்ள ஒரு கடைக்குள் பாம்பு புகுந்ததாக வினோத் திவாரி தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில், அப்பகுதிக்கு விரைந்து சென்ற வினோத் கடைக்குள் புகுந்திருந்த கோப்ரா வகை பாம்பை பிடித்து தான் கொண்டுவந்த பைக்குள் அடைக்க முயற்சித்துள்ளார்.
அப்போது, எதிர்பாராத விதமாக வினோத்தை பாம்பு கடித்தது. இதனை உணர்ந்த வினோத், உடனடியாக அங்கிருந்து மருத்துவமனைக்கு நடந்து சென்றார். ஆனால், பாம்பு கடித்த சில நிமிடங்களிலேயே நடந்து சென்ற வினோத் பரிதாபமாக உயிரிழந்தார். இது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, பாம்பு வினோத்தை கடிக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
என்னை கடவுள் எனச் சொல்லி கடவுளை தாழ்த்திவிட வேண்டாம் என்றும், நான் சாதாரண மனிதன்தான் என்றும் இசையமைப்பாளர் இளையராஜா கூறியுள்ளார்.…
சொல் ஒன்று செயல் ஒன்றாக விஜயகாந்த் இருந்ததில்லை எனக் கூறிய பிரேமலதா, கோலா, நகை விளம்பரங்களில் சிலர் நடிப்பர் என…
This website uses cookies.