கேரளாவில் சோலார் பேனல் மோசடி வழக்கில் தொடர்புடைய சரிதா நாயர் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
8 ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருந்த போது, அப்போதைய முதலமைச்சர் உம்மன் சாண்டிக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியவர் சரிதா நாயர். குறைந்த விலையில் சோலார் பேனல் அமைத்து தருவதாகக் கூறி பலரிடம் பணம் வாங்கி, பல கோடி ஏமாற்றியதாக புகார் கூறப்பட்டது.
இதன்மூலம், உம்மன்சாண்டி மற்றும் அவரது அமைச்சரவையில் இருந்த காங்கிரஸ் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களுக்கும் தொடர்பு இருப்பதாக தகவல்கள் கசிந்தன.
இதையடுத்து உம்மன் சாண்டி பதவி விலகக் கோரி கம்யூனிஸ்ட் கட்சியினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே, உம்மன் சாண்டி உள்பட காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள், எம்எல்ஏக்களும் தன்னை பலாத்காரம் செய்ததாக சரிதா நாயர் புகார் கூறியது அடுத்த பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனிடையே, தனது கார் ஓட்டுநர் வினுகுமார் சிலருடன் சேர்ந்து உணவில் விஷம் கலந்து தன்னை கொலை செய்ய முயற்சிப்பதாக சரிதா நாயர் கூறினார். இதையடுத்து போலீசார் வினு குமார் மீது வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.
இந்த நிலையில், பார்வை குறைபாடு, இடதுகாலில் சுகவீனம் உள்பட பல்வேறு பிரச்சனைகளால் சரிதா நாயர் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு அவரது ரத்த மாதிரி மற்றும் தலைமுடி ஆகியவை பரிசோதனைக்காக டெல்லியில் உள்ள தேசிய தடயவியல் பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இதன்முடிவுகள் வெளியான பிறகு தான், உணவில் விஷம் கலந்தது உண்மையா..? என்பது குறித்து தெரிய வரும்.
சேலம், நாராயண நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் மாதவராஜ்(75). இவரது மனைவி பிரேமா(67). கணவன் மனைவி மட்டும் வீட்டில்…
டிராகன் திரைப்பட கதாநாயகி கயாது லோஹர் ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் புகழ்பெற்ற வாயுலிங்கமான ஸ்ரீகாளஹஸ்திஸ்வரர், ஞானபிரசுன்னாம்பிகை தாயாரை தரிசனம்…
பிரியங்கா வசி திருமணம் குறித்து பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பல விஷயங்களை பேசியுள்ளார். மெட்ரோ மெயில் என்ற சேனலுக்கு…
தமிழக அரசின் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 261 பயனாளிகளுக்கு வீடு கட்டிக் கொள்வதற்கு அரசு ஆணையினை உயர்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தனித்து தான் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவோம் என…
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் ஜீடிமெட்லா பகுதியில் உள்ளகஜுலராமரம், பாலாஜி லேஅவுட்டில் சஹஸ்ரா மகேஷ் ஹைட்ஸ் எனும் அடுக்குமாடி குடியிருப்பில் வெங்கடேஸ்வர்…
This website uses cookies.