பழங்குடியின இளைஞரை துப்பாக்கியால் சுட்ட பாஜக எம்எல்ஏவின் மகன் : தலைமறைவானவரை தேடும் போலீஸ்!!

பழங்குடியின இளைஞரை துப்பாக்கியால் சுட்ட பாஜக எம்எல்ஏவின் மகன் : தலைமறைவானவரை தேடும் போலீஸ்!!

மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக சிவ்ராஜ் சிங் சவுகான் உள்ளார். இங்குள்ள சிங்குர்லி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்எல்ஏவாக இருப்பவர் ராம் லாலு வைஷ்யா. இவரது மகன் பெயர் விவேகானந்த் வைஷ்யா. இவருக்கு 40 வயது ஆகிறது.

இந்நிலையில் தான் நேற்று முன்தினம் மாலையில் விவேகானந்த் வைஷ்யாவுக்கும், இன்னொரு தரப்புக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்த வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த விவேகானந்த் வைஷ்யா தனது துப்பாக்கியை எடுத்து மிரட்டியுள்ளார். மேலும் அவர் பழங்குடியினத்தை சேர்ந்த சூர்யா பிரகாஷ் கைர்வார் (வயது 34) என்பவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு வேகமாக சென்றுள்ளார்.

பாஜக எம்எல்ஏ மகன்

இதில் கையில் குண்டு காயமடைந்த சூர்யா பிரகாஷ் உயிருக்கு போராடினார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாஜக எம்எல்ஏ ராம் லாலு வைஷ்யாவின் மகனான விவேகானந்த் வைஷ்யாவை தீவிரமாக தேடி வருகின்றனர்.

முன்னதாக கடந்த ஆண்டு ஜூலை 21ம் தேதி ஊழியர் சஞ்சீவ் சுக்லா என்பவரை இவர் துப்பாக்கியால் சுட்டு இருந்தார். இந்த வழக்கில் அவர் ஜாமீனில் உள்ள நிலையில் தான் தற்போது பழங்குடியினத்தை சேர்ந்தவரை துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

இதனால் விவேகான்ந்த் வைஷ்யாவை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். மத்திய பிரதேசத்தில் சமீபத்தில் தான் பழங்குடியினத்தை சேர்ந்த ஒருவரின் முகத்தில் ஒருவர் சிறுநீர் கழிக்கும் வீடியோ வெளியானது.

அந்த நபர் பாஜகவை சேர்ந்தவர் என கூறப்பட்ட நிலையில் அதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இத்தகைய சூழலில் தான் தற்போது பாஜக எம்எல்ஏவின் மகன் விவேகான்ந்த வைஷ்யா பழங்குடியனத்தை சேர்ந்த சூர்ய பிரகாஷ் கைர்வாரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு சென்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

போக்சோ கைதி திடீர் மரணம்.. கோவை மத்திய சிறையில் அடுத்தடுத்து உயிரிழப்புகளால் அதிர்ச்சி!

கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

21 minutes ago

நான் இசைக்கடவுளா? ரசிகர்களுக்கு இளையராஜா இசைக் கட்டளை!

என்னை கடவுள் எனச் சொல்லி கடவுளை தாழ்த்திவிட வேண்டாம் என்றும், நான் சாதாரண மனிதன்தான் என்றும் இசையமைப்பாளர் இளையராஜா கூறியுள்ளார்.…

1 hour ago

கோலா, நகை விளம்பரம்.. விஜயை மறைமுகமாக சாடிய பிரேமலதா!

சொல் ஒன்று செயல் ஒன்றாக விஜயகாந்த் இருந்ததில்லை எனக் கூறிய பிரேமலதா, கோலா, நகை விளம்பரங்களில் சிலர் நடிப்பர் என…

2 hours ago

வார தொடக்கத்தில் உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில், இன்று (மார்ச் 10) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 10 ரூபாய் உயர்ந்து 8 ஆயிரத்து 50…

3 hours ago

ராஷ்மிகாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்? மத்திய அரசுக்கு சமூக அமைப்பு பரபரப்பு கடிதம்!

நடிகை ராஷ்மிகா மந்தனாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி பாதுகாப்பு வழங்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு கடிதம்…

3 hours ago

அந்த மாதிரி ஐடியா இல்லங்க.. ஐசிசி சாம்பியன் டிராபியில் இந்தியா படைத்த மொத்த சாதனைகள்!

ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதில்லை என இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார். துபாய்: 9வது ஐசிசி…

4 hours ago

This website uses cookies.