தென்கொரியாவைச் சேர்ந்த பிரபல யூடியூபருக்கு சாலையில் வைத்து மானபங்கம் செய்த சம்பவம் தொடர்பாக 2 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.
நேற்றிரவு தென் கொரியாவை சேர்ந்த பிரபல யூடியூபர் மையோசி இன் என்பவர் மும்பை புறநகர் பகுதியான ‘கர்’ என்ற இடத்தில் நேரலையில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது, சாலையின் ஓரத்தில் பைக்குடன் அமர்ந்திருந்த இளைஞர்களில் ஒருவர், திடீரென மையோசி இன், கையை பிடித்து இழுத்து சென்றார்.
இதனால், அதிர்ந்து போன அவர், ‘நோ நோ’ எனக் கூறியவாறு அந்த நபரிடம் இருந்து விலகிச் சென்றார். ஆனால், விடாது துரத்திய அந்த இளைஞர், மையோசி இன்-ஐ மீண்டும் நெருங்கி வந்த அந்த இளைஞர் முத்தம் கொடுக்க முயன்றார். அவரிடம் இருந்து தப்பிய மையோசி இன்-ஐ, இரு சக்கர வாகனத்தில் வந்து வீட்டிற்கு அழைத்து செல்வதாகவும், வாகனத்தில் ஏறும்படி கட்டாயப்படுத்தினார்.
அதற்கு மறுப்பு தெரிவித்து மையோசி இன் மெதுவாக அவர்களிடம் இருந்து எஸ்கேப் ஆகி நடந்து சென்றார். இது அனைத்தும் அவரது சேனலில் நேரலையில் ஒளிபரப்பாகியது.
இந்த வீடியோ மும்பை போலீசாரின் கவனத்திற்கு வந்ததை தொடர்ந்து, தாமாக முன்வந்து, “பாலியல் துன்புறுத்தல்” பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து இரண்டு பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரவீனா தாஹா 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான சீரீயலான “தங்கம்” தொடரில் குழந்தை நட்சத்திரமாக…
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை…
புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…
தெலங்கானா மாநிலம் குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னூர் மண்டலம், அடேசரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ரம்பாபாய் - பத்ருஷாவ் தம்பதியினரின்…
அடுத்த படத்துக்கு யார் இயக்குனர்? அஜித்குமார் நடிப்பில் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை…
தமிழகத்துக்கு அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி, தேர்தல் வியூகம் என அடுத்தடுத்து…
This website uses cookies.