ஆந்திரா : திருப்பதியில் மசூலிப்பட்டினம் சிறப்பு ரயில் பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டு விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பதி ரயில் நிலையத்திற்கு ஒரு கிலோ மீட்டர் தொலைவில் திருப்பதி மச்சிலிப்பட்டணம் சிறப்பு ரயில் (07068) (side line) பக்கவாட்டு தண்டவாளத்தில் இருந்து நடைமேடை தண்டவாளத்திற்கு கொண்டு வரும்போது ரயிலின் முன்பதிவில்லா 2 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து கீழ் இறங்கியது.
இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ரயில்வே மீட்புக்குழுவினர் போர்க்கால அடிப்படையில் அதிநவீன ஹைட்ராலிக் ஜாக்கி உதவியுடன் ஆறு மணி நேரம் போராடி மீண்டும் ரயில் பெட்டிகளை தண்டவாளத்தில் பொருத்தினர்.
பிரதான தண்டவாளத்தில் இல்லாமல் பக்கவாட்டு தண்டவாளத்தில் இந்த விபத்து நடைபெற்ற காரணத்தினால் மற்ற ரயில் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்படவில்லை.
ரயில் பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கியதன் காரணமாக அங்கு பதற்றம் நிலவியது.
தமிழ் திரையுலகில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் மிகப்பெரிய வெற்றிப் படமாக டிராகன் படம் உருவாகியுள்ளது,அஸ்வந்த் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன்…
காசு மழையில் டிராகன் கடந்த மாதம் பிப்ரவரி 21 ஆம் தேதி அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில்…
டி.ராஜேந்திரனின் பரிதாப நிலை.! தமிழ் சினிமாவில் நடிகர்,இயக்குநர்,இசையமைப்பாளர்,தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர்,விநியோகஸ்தர்,அரசியல் வாதி என பல்வேறு திறமைகளை கையில் வைத்திருப்பவர் டி.ராஜேந்திரர். இதையும்…
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் ராம் சந்தர் (வயது 35). இவர் கோவையில் தங்கி தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார்.…
பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்.! நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை…
நடிகர் விஜய் தற்போது சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். தனது கடைசிபடம் ஜனநாயகன் தான் என கூறியுள்ள நிலையில் தமிழக…
This website uses cookies.