திருப்பதி மலை அடிவாரத்தில் இன்று நடைபெற்ற படி உற்சவத்தில் தென் மாநிலங்களை சேர்ந்த சுமார் 3,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.
திருப்படி உற்சவம் என்ற பெயரில் திருப்பதி மலை அடிவாரத்தில் இருந்து திருமலைக்கு செல்லும் 3 ஆயிரத்து 550 படிக்கட்டுகளுக்கும் ஒவ்வொரு ஆண்டும் பூஜைகள் நடத்தி பக்தர்கள் மலையேறி செல்வது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான திருப்படி உற்சவம் திருப்பதி மலை அடிவாரத்தில் இன்று நடைபெற்றது. தேவஸ்தான தாசாகித்திய திட்டம் ஏற்பாட்டில் நடைபெற்ற திருப்படி உற்சவ நிகழ்ச்சியில் 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட தென் மாநில பக்தர்கள் பங்கேற்றனர்.
திருப்பதி மலை அடிவாரத்தில் தேங்காய் உடைத்து, கற்பூர ஆரத்தி கொடுத்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்ட பின் பக்தர்கள் திருமலை வரை இருக்கும் 3550 படிக்கட்டுகளுக்கு சந்தனம் இட்டு, குங்குமம் வைத்து_கற்பூரம் ஏற்றி வழிபாடு நடத்தி மலையேறி சென்றனர். பின்னர் அவர்கள் ஏழுமலையானை தரிசிக்க அனுமதி அளிக்கப்பட்டது.
தமிழ் சினிமாவில் உச்ச நடிகையாக உள்ளவர் நடிகை நயன்தாரா. தென்னிந்திய சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த அவர்…
அஜித் குமார் நடிப்பில் சமீபத்தில் வெளியான விடாமுயற்சி படம் படுதோல்வியடைந்தது. இதனால் அஜித் ரசிகர்கள் அடுத்த படமான குட் பேட்…
அதிமுகவை யாராலும் உடைக்கவும், முடக்கவும் முடியாது என்று, செங்கோட்டையன் குறித்த கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி பதில் அளித்துள்ளார். சென்னை: இன்றைய…
ஆர்ய - சந்தானம் கலக்கல் காம்போவில் வெளியான பாஸ் (எ) பாஸ்கரன் படம் மார்ச் 21ம் தேதி ரீரிலீஸ் செய்யப்பட…
மம்மூட்டி நடித்திருக்கும் பசூக்கா திரைப்படம் ஏப்ரல் 10ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. இதனை தாண்டி தனது அடுத்தடுத்த படங்களையும்…
திருவள்ளூர் அடுத்த கொப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் சரத்குமார் என்கிற ஷாம் (31). இவர் தனியார் நிறுவனம் நடத்தி வருகிறார்.இவருக்கும் திருவள்ளூர்…
This website uses cookies.