பொதுத்தேர்வு எழுத வந்த மாணவன் மூச்சுத்திணறி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் கூடூர் டி.ஆர்.டபிள்யூ தேர்வு மையத்தில் தேர்வு எழுத வந்த 18 வயது மாணவன் மாரடைப்பால் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
பெத்தாபுரம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (18). தற்போது ஆந்திர மாநிலத்தில் இன்டர் இரண்டாம் வருட (+2) மாணவர்களுக்கான தேர்வு நடைபெற்று வரும் நிலையில் தேர்வு எழுத கூடூர் டி.ஆர்.டபிள்யூ தேர்வு மையத்திற்கு இன்று காலை வந்தார்.
அங்கு காவலர்கள் மாணவர்களை சோதனை செய்து தேர்வு மையத்தில் அனுமதித்துக் கொண்டிருந்த நிலையில் சோதனை மேற்கொண்ட காவலரிடம் மூச்சு அடைப்பதாக சதீஷ் தெரிவித்துள்ளார்.
இதனால் காவலர்கள் சதீசை ஓய்வு எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்திய நிலையில் திடீரென மயங்கி விழுந்ததை தொடர்ந்து உடனடியாக அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு சதீஷை பரிசோதித்த மருத்துவர்கள் மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாக தெரிவித்தனர்.
18 வயது மாணவன் தேர்வு எழுத வந்த நிலையில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்த சம்பவம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…
ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
This website uses cookies.