வகுப்பறையில் தொழுகை நடத்திய மாணவர்கள்: பள்ளிக் கல்வித்துறை நோட்டீஸ்…கர்நாடகாவில் மீண்டும் சர்ச்சை..!!

மங்களூரு: மாணவ-மாணவிகள் தொழுகையில் ஈடுபட்ட வீடியோ தொடர்பாக பள்ளி நிர்வாகிகளிடம் விளக்கம் கேட்டு கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் கடப்பா தாலுகா அங்காதர்கா பகுதியில் அரசு தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இங்கு அனைத்து மதத்தை சேர்ந்த மாணவி-மாணவிகள் படித்து வருகிறார்கள்.

சமீபத்தில் இந்த பள்ளியை சேர்ந்த முஸ்லிம் மாணவிகள் வகுப்பறை வராண்டாவில் அமர்ந்து தொழுகை செய்த வீடியோ வைரலானது. அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியதால் பொதுமக்கள், பிற மாணவிகளின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரி வட்டார கல்வித்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். இதையடுத்து பள்ளிக்கு சென்ற கல்வித்துறை அதிகாரிகள் வகுப்பு ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியரிடம் விசாரித்தனர்.

அப்போது கடந்த 4ம் தேதி விளையாட்டு பிரிவு நேரத்தில் முஸ்லிம் மாணவிகள் தொழுகை செய்திருப்பதாக ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இதை ஏற்க மறுத்த கல்வித்துறை அதிகாரிகள், பள்ளி நேரத்தில் தொழுகை செய்திருப்பது, அரசு உத்தரவை மீறுவது போன்று அமைந்துள்ளது.

இந்நிலையில் நேற்று சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியருக்கு கல்வித்துறை அதிகாரி லோகேஷ் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில் முஸ்லிம் மாணவிகள் தொழுகை செய்தது தொடர்பாக விரிவாக விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கும்படி உத்தரவிடப்பட்டிருந்தது.

இதேபோன்று பாகல்கோட்டை மாவட்டம் இலகல் பகுதியில் உள்ள மவுலான ஆசாத் பள்ளியில் 6 முஸ்லிம் மாணவர்கள் தொழுகையில் ஈடுபட்டனர். இதுபற்றி பாகல்கோட்டை கல்வித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

UpdateNews360 Rajesh

Recent Posts

நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!

நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…

46 minutes ago

பிளாக்கில் டிக்கெட் விற்பவர்களுக்கு முதல்வர் கனவு.. விஜய்யை மறைமுமாக சாடிய அமைச்சர்!

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…

1 hour ago

கஞ்சா வைத்திருந்த பிரபல சினிமா இயக்குநர்கள்..வளைத்து வைளத்து கைது செய்யும் போலீசார்!

போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…

2 hours ago

வெற்றிமாறன் மேல் உள்ள பயத்தால் சூர்யா எடுத்த திடீர் முடிவு? அப்போ வாடிவாசலோட நிலைமை?

இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…

3 hours ago

அடுத்தவ புருஷனை பங்கு போட்டது தப்புதான்.. ஆனா பாலு மகேந்திரா எனக்கு எல்லாமே கொடுத்தாரு ; நடிகை ஓபன்!

நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…

3 hours ago

ஜெயிலரை ஓவர் டேக் செய்யப்போகும் குட்  பேட் அக்லி! விரைவில் ஒரு தரமான சம்பவம்?

தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…

4 hours ago

This website uses cookies.