தெலங்கானா : பிரபல கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவனை சீனியர்கள் ரேகிங் என்ற பெயரில் அடித்து கொடிமைப்படுத்திய வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள செவாலா பகுதியில் IBS என்னும் பிரபல கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் பயின்று வரும் முதலாம் ஆண்டு மாணவனை, ரேகிங் என்ற பெயரில் சில மாணவர்கள் அடித்து துன்புறுத்தியுள்ளனர்.
அந்த மாணவனை கொடூரமாகத் தாக்கும் சீனியர் மாணவர்கள், பாலியல் ரீதியாகவும் தொந்தரவு செய்துள்ளனர். இதனை அங்கிருந்த சக மாணவர்கள் வீடியோ எடுத்து சமூகவலைதளங்களில் பதிவிட்டனர்.
அந்த வீடியோவில் ‘அல்லா ஹு அக்பர்’ எனச் சொல்லுமாறு ஒவ்வொருவராக அடித்து கொடுமைப்படுத்தியுள்ளனர். அந்த நபரும் வலி தாங்க முடியாமல் அழுது கொண்ட அதனை சொல்கிறார். மேலும், அந்த மாணவனை அடித்தே கொல்ல வேண்டும் என்று அங்கிருந்த சீனியர்களில் ஒருவர் சொல்வது அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது.
இதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மாணவன் அளித்த புகாரின் பேரிலும், வைரலாகிய வீடியோவின் அடிப்படையிலும், கொலை முயற்சி உள்பட 4 பிரிவுகளின் கீழ் சீனியர் மாணவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சேலம், நாராயண நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் மாதவராஜ்(75). இவரது மனைவி பிரேமா(67). கணவன் மனைவி மட்டும் வீட்டில்…
டிராகன் திரைப்பட கதாநாயகி கயாது லோஹர் ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் புகழ்பெற்ற வாயுலிங்கமான ஸ்ரீகாளஹஸ்திஸ்வரர், ஞானபிரசுன்னாம்பிகை தாயாரை தரிசனம்…
பிரியங்கா வசி திருமணம் குறித்து பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பல விஷயங்களை பேசியுள்ளார். மெட்ரோ மெயில் என்ற சேனலுக்கு…
தமிழக அரசின் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 261 பயனாளிகளுக்கு வீடு கட்டிக் கொள்வதற்கு அரசு ஆணையினை உயர்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தனித்து தான் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவோம் என…
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் ஜீடிமெட்லா பகுதியில் உள்ளகஜுலராமரம், பாலாஜி லேஅவுட்டில் சஹஸ்ரா மகேஷ் ஹைட்ஸ் எனும் அடுக்குமாடி குடியிருப்பில் வெங்கடேஸ்வர்…
This website uses cookies.