தெலங்கானா : பிரபல கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவனை சீனியர்கள் ரேகிங் என்ற பெயரில் அடித்து கொடிமைப்படுத்திய வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள செவாலா பகுதியில் IBS என்னும் பிரபல கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் பயின்று வரும் முதலாம் ஆண்டு மாணவனை, ரேகிங் என்ற பெயரில் சில மாணவர்கள் அடித்து துன்புறுத்தியுள்ளனர்.
அந்த மாணவனை கொடூரமாகத் தாக்கும் சீனியர் மாணவர்கள், பாலியல் ரீதியாகவும் தொந்தரவு செய்துள்ளனர். இதனை அங்கிருந்த சக மாணவர்கள் வீடியோ எடுத்து சமூகவலைதளங்களில் பதிவிட்டனர்.
அந்த வீடியோவில் ‘அல்லா ஹு அக்பர்’ எனச் சொல்லுமாறு ஒவ்வொருவராக அடித்து கொடுமைப்படுத்தியுள்ளனர். அந்த நபரும் வலி தாங்க முடியாமல் அழுது கொண்ட அதனை சொல்கிறார். மேலும், அந்த மாணவனை அடித்தே கொல்ல வேண்டும் என்று அங்கிருந்த சீனியர்களில் ஒருவர் சொல்வது அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது.
இதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மாணவன் அளித்த புகாரின் பேரிலும், வைரலாகிய வீடியோவின் அடிப்படையிலும், கொலை முயற்சி உள்பட 4 பிரிவுகளின் கீழ் சீனியர் மாணவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…
ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
This website uses cookies.