3 பள்ளிகளுக்கு அடுத்தடுத்து வந்த வெடிகுண்டு மிரட்டல்.. தீவிர சோதனை : பதற்றத்தில் தலைநகரம்..!!

Author: Udayachandran RadhaKrishnan
1 May 2024, 10:50 am

3 பள்ளிகளுக்கு அடுத்தடுத்து வந்த வெடிகுண்டு மிரட்டல்.. தீவிர சோதனை : பதற்றத்தில் தலைநகரம்..!!

டெல்லியில் துவாரகா, நொய்டா உள்ளிட்ட இடங்களில் உள்ள 3 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

துவாரகா பப்ளிக் பள்ளி, டெல்லி பப்ளிக் பள்ளி, மதர் மேரிஸ் ஆகிய பள்ளிகளுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் நொய்டா பப்ளிக் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு பள்ளிக்கு வந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.

இதுதொடர்பாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, பள்ளிகளில் வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க: உழைப்பாளர்களின் வளர்ச்சியே உண்மையான வளர்ச்சி : MAY தினத்தை முன்னிட்டு விஜய் வாழ்த்து!

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பள்ளிகளுக்கு சமீபத்தில் வந்த வெடிகுண்டு மிரட்டல் விடுத்த அதே இ-மெயில் மூலம் ஒரே விதமாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ