ஆந்திரா : தீ விபத்தில் சிக்கிய டாக்டர் ரவிசங்கர் ரெட்டி 50 சதவிகித தீக்காயத்துடன் பலி.
ரேனிகுண்டாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது. அங்கு புற நோயாளிகளுக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
அந்த கட்டிடத்தின் இரண்டாவது தளத்தில் டாக்டர் ரவிசங்கர் ரெட்டி குடும்பத்துடன் தங்கி இருந்தார். தீ விபத்தில் டாக்டர் தம்பதியினர் மற்றும் அவருடைய இரண்டு குழந்தைகள் ஆகியோரும் சிக்கி கொண்டனர்.
ரவிசங்கர் ரெட்டி – அனந்தலட்சுமி தம்பதியின் மகள் கார்த்திகா, மகன் பரத் ரெட்டி ஆகியோர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மரணம் அடைந்த நிலையில் டாக்டர் அனந்தலட்சுமி உட்பட இரண்டு பெண்கள் மீட்கப்பட்டனர்.
இந்த நிலையில் 50 சதவீத தீக்காயத்துடன் மீட்கப்பட்ட டாக்டர் ரவிசங்கர் ரெட்டி மரணம் அடைந்தார். ஒரே சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மகன் மகள் ஆகியோர் மரணம் அடைந்தது குடும்ப உறுப்பினர்கள் நட்பு வட்டாரங்கள் ஆகியவற்றில் கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.