ஓமனின் மஸ்கட் விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், கேரளாவின் கொச்சினுக்கு கிளம்பியது. விமானத்தில் 4 குழந்தைகள், 6 ஊழியர்கள் உட்பட 145 பேர் இருந்தனர்.
ஓடுபாதையில் விமானம் சென்று கொண்டிருந்த போது, 2வது இன்ஜீனில் இருந்து திடீரென தீ விபத்து ஏற்பட்டதுடன் புகை கிளம்பியது. இதனையடுத்து விமானம் உடனடியாக நிறுத்தப்பட்டு, பயணிகள் அனைவரும் உடனடியாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.
இந்த சம்பவத்தில் சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும், பெண் ஒருவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மாற்று விமானமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஏர் இந்தியா நிறுவனம் கூறியுள்ளது.
இது தொடர்பாக, இந்திய விமான போக்குவரத்து இயக்குநர் ஜெனரலுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து, விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பொறியாளர்கள் குழுவினர் விமானத்தை ஆய்வு செய்து வருகின்றனர்.
பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…
ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
This website uses cookies.