விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் பயங்கர தீ விபத்து.
மூன்று ஏர்கண்டிஷன் ரயில் பெட்டிகள் தீ பற்றி எரிந்து கருகின.
குர்பாவில் இருந்து இன்று காலை விசாகப்பட்டினம் வந்து சேர்ந்த எக்ஸ்பிரஸ் ரயில் பதினோராவது பிளாட்பாரத்தில் நிறுத்தப்பட்டிருந்தது.
இன்னும் சற்று நேரத்தில் அந்த ரயில் திருமலா எக்ஸ்பிரஸ் ரயிலாக திருப்பதிக்கு செல்ல இருந்த நிலையில் அதில் ஏறி பயணிப்பதற்காக பயணிகள் காத்திருந்தனர்.
அப்போது திடீரென்று ரயிலின் எம்1, பி6, பி 7 ஆகிய பெட்டிகள் திடீரென்று தீ பற்றி எரிய துவங்கின.
ரயில் பெட்டிகளில் ஏற்பட்ட தீ பெரும் தீவிபத்தாக மாறி பயங்கரமாக எரிய துவங்கிய நிலையில் அவற்றிலிருந்து கரும்புகை வெளியேறியது.
இதனால் அங்கு காத்திருந்த பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்து அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.
ரயில்வே பாதுகாப்பு படையினர், தீயணைப்புத் துறையினர் ஆகியோர் தீயை கட்டுப்படுத்தி அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மூன்று பெட்டிகளில் ஏற்பட்ட தீ மற்ற பெட்டிகளுக்கு பரவ வாய்ப்புகள் உள்ள காரணத்தால் மற்ற பெட்டிகளை அங்கிருந்து அப்புறப்படுத்த முயற்சிகள் நடைபெறுகின்றன.
திருச்சியில் அமைச்சர் கே.என்.நேருவுக்கு சொந்தமான 2 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடந்து வருவது திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது தமிழக…
நெட்பிலிக்ஸில் நயன்தாரா படம்… சசிகாந்த் இயக்கத்தில் நயன்தாரா, மாதவன், சித்தார்த் ஆகியோரின் நடிப்பில் கடந்த 4 ஆம் தேதி நெட்பிலிக்ஸ்…
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் இன்று சட்டப்பேரவைக்கு வந்த அதிமுக எம்எல்ஏக்கள் அந்த தியாகி யார் என்ற…
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
This website uses cookies.