மாரடைப்பால் உயிரிழக்கும் சம்பவங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிகழ்வதை அதிகம் பார்க்கமுடிகிறது. குறிப்பாக உடற்பயிற்சி செய்யும் போது, நடனமாடும் போது உயிரிழப்புகள் ஏற்படுகிறது.
அதேபோன்ற ஒரு சம்பவம் சத்தீஸ்கரின் நிகழ்ந்துள்ளது. சமீபத்தில் சத்தீஸ்கர் மாநிலம் ராஜ்நந்த்கான் மாவட்டத்தில் உள்ள டோங்கர்கர் என்ற இடத்தில் திருமண நிகழ்ச்சியில் மேடையில் நடனமாடிக்கொண்டிருந்த ஒருவர் மாரடைப்பால் சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இறந்தவர் பலோட் மாவட்டத்தைச் சேர்ந்த திலீப் ரௌஜ்கர் என்பதும், அவர் மாநிலத்தில் உள்ள பிலாய் ஸ்டீல் ஆலையில் பொறியாளராகப் பணியாற்றியவர் என்பதும் தெரியவந்தது.
மேடையில் மிகுந்த உற்சாகத்துடன் நடனமாடிக்கொண்டிருந்த அந்த நபர், திடீரென மேடையில் ஓரத்தில் உட்காருகிறார். அடுத்த சில வினாடிகளில் மேடையிலேயே சரிந்து விழுகிறார்.
இதனை தொடர்ந்து அவரை அங்கிருந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், அந்த நபர் மேடையில் ஆடிக்கொண்டிருந்த வீடியோ சமூக வலைதலங்களில் வைரலாகி வருகிறது.
தூத்துக்குடி அருகே காதலை கைவிட்டுச் சென்ற இளம்பெண்ணை தீக்கிரையாக்கி கொன்ற இளைஞர் உள்பட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி:…
தோனி களமிறங்குவாரா? ரசிகர்கள் எதிர்பார்ப்பு.! ஐபிஎல் 2025 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள்…
தங்கள் கட்சியை வளர்ப்பதற்காகவும், தொண்டர்களை உற்சாகப்படுத்துவதற்காகவும் விஜய் அவ்வாறு கூறியுள்ளதாக இபிஎஸ் தெரிவித்துள்ளார். சேலம்: சேலத்தில் இன்று அதிமுக சார்பாக…
பாலிவுட் நடிகை ஷாக் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் "சிறகடிக்க ஆசை" தொடரில் வித்யா எனும் கதாபாத்திரத்தின் தோழியாக நடித்து…
விழுப்புரம் அருகே, ஹெட்போன் போட்டுக் கொண்டு தண்டவாளம் அருகே அமர்ந்திருந்த இளைஞர் ரயில் மோதி உயிரிழந்துள்ளார். விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம்,…
நீட் தேர்வு அச்சத்தால் மாணவி தர்ஷினியின் மரணத்திற்கு ஸ்டாலின் மாடல் திமுக அரசே முழு பொறுப்பு என எடப்பாடி பழனிசாமி…
This website uses cookies.