திடீர் பரபரப்பு.. ஆளுநர் பதவி ராஜினாமா : குடியரசுத் தலைவருக்கு எழுதிய கடிதத்தால் பரபரப்பு!
ஆளுநர் பதவியை திடிரென ராஜினாமா செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தனது பதவியை ராஜினாமா செய்தார். தனிப்பட்ட சொந்த காரணங்களுக்காக தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்வதாக பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார். அதன்படி, தனது ராஜினாமா கடிதத்தை குடியரசு தலைவர் திரெளபதி முர்முவுக்கு அனுப்பினார்.
அதுமட்டுமில்லாமல், பஞ்சாப் மற்றும் ஹரியானாவின் தலைநகரான சண்டிகரின் யூனியன் பிரதேசத்தின் (UT) நிர்வாகி பதவியிலிருந்தும் விலகுவதாகவும் அறிவித்தார். இந்த எதிர்பாராத அறிவிப்பு இப்பகுதியின் எதிர்கால தலைமை குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது. முன்பு தமிழ்நாட்டின் ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித், அரசுடன் மோதல் போக்கில் ஈடுபட்டு வந்தார்.
இதை தொடர்ந்து பஞ்சாப் மாநிலத்தில் ஆளுநராக நியமிக்கப்பட்ட பிறகும், அம்மாநில அரசுடனும் கடுமையான மோதல் போக்க்கு நிலவியது. தற்போது, நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கும் சமயத்தில், பஞ்சாப் மாநில ஆளுநர் பதவியை ராஜினாமா செய்திருப்பது முக்கியமானதாக பார்க்கப்படுகின்றது.
கல்வியாளர், சமூக ஆர்வலர் என அறியப்பட்ட பன்வாரிலால் புரோகித், ஆளுநராக அஸ்ஸாம் மற்றும் தமிழகத்தை தொடர்ந்து, பஞ்சாப் மாநில ஆளுநராகவும், சண்டிகர் யூடியின் நிர்வாகியாகவும் பணியாற்றி வந்தார். தற்போது, அந்த பதவியில் இருந்து விலகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளார்.
பன்வாரிலால் புரோகித் அரசியல் வாழ்க்கையில், மூன்று முறை மக்களவை உறுப்பினராகவும், ‘தி ஹிட்டாவாடா’ பத்திரிகையின் நிர்வாக ஆசிரியராகவும், மேலும், மத்திய இந்தியாவின் அரசியல் மற்றும் ஊடகத் துறைகளில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
60 வயது நடிகருடன் நான் இருந்தனா-கஸ்தூரி அதிர்ச்சி தகவல் தமிழ்,தெலுங்கு,மலையாள என பல திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம்…
நந்தமூரி பாலகிருஷ்ணாவின் அதிரடி என்ட்ரி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக உள்ள ஜெயிலர் 2 திரைப்படத்தில் பிரபல தெலுங்கு…
வாட் ப்ரோ..? கூல் சுரேஷின் சர்ச்சைக்குரிய உரை தமிழில் சில படங்களில் நடித்திருப்பவர் கூல் சுரேஷ்,இவர் நடித்து ஃபேமஸ் ஆனதைவிட…
கடலூரில், மருமகள் மற்றும் பேத்திகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக மாமனாரை மாமியாருடன் சேர்ந்து தீயிட்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு…
தமிழ் சினிமாவில் புதிய முயற்சி அஜித் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய "குட் பேட் அக்லி" படம் வருகிற ஏப்ரல்…
சொத்து குறித்து மோகன் பாபு மற்றும் சௌந்தர்யா தொடர்பாக ஒரு தவறான செய்தி பரவி வருகிறது என நடிகையின் கணவர்…
This website uses cookies.